Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Senthil Balaji: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு (Senthil Balaji) சிபிஐ அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறுகையில், அப்படி ஏதும் சம்மன் வரவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

CBI Summons DMK MLA Senthil Balaji in Karur stampede Case Fails to Appear for Inquiry

கரூர் கூட்டநெரிசல் வழக்கு

கூட்டத்தில் விஜய்யை பார்க்க வந்தவர்கள் உயிரிழந்து கிடந்த நிலையிலும் விஜய் அன்றைய தினமே சென்னைக்கு புறப்பட்டார். அவரிடம் விமான நிலையட்த்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியும் பதில் எதுவும் கூறாமல் சென்றுவிட்டார். மக்கள் சந்திப்பு கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஏற்கனவே ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் விஜய்யும் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி சிபிஐ முன்பு ஆஜர் ஆனார்.

இருமுறை சிபிஐ விசாரணைக்கு ஆஜர் ஆன விஜய்

அப்போது விஜய்யிடம் சுமார் 7 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர். கரூர் கூட்டத்திற்கு தாமதமாக வந்தது ஏன்? நெரிசல் ஏற்பட்ட பிறகு உடனடியாக சென்னை திரும்பியது ஏன்? என பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் ஜனவரி 13 ஆம் தேதி ஆஜராக கூறிய நிலையில் பொங்கல் முடிந்து ஆஜர் ஆவதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து கடந்த ஜனவரி 19ஆம் தேதி விஜய் விசாரணைக்கு ஆஜர் ஆனார். அப்போதும் அவரிடம் பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் ஆஜர் ஆக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன்?

ஆனால் அவர் நாளை தவெக சார்பில் போட்டியிட உள்ளவர்களிடம் நேர்காணல் நடத்த இருப்பதாகவும், இன்னொரு நாளில் ஆஜர் ஆவார் என்றும் அவரது தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதனால் நாளை விஜய் ஆஜர் ஆக மாட்டார் என்றே கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி சிபிஐ விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் அப்படி சம்மன் எதுவும் வரவில்லை என்று விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை

முன்னதாக விஜய்யிடன் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய அதே நாளில், தமிழக காவல்துறை அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம், ஐஜி நிர்மல் குமார் ஜோஷி உள்ளிட்டோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதேபோல, கரூரில் உள்ள சிபிஐ முகாம் அலுவலகத்திலும் விஜய் பிரசாரத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தி இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+