ஒரு மாதத்திற்குள் தனியார் பள்ளி வாகனங்களில் சிசிடிவி, ஜிபிஎஸ் பொருத்த வேண்டும்.. ஐகோர்ட் உத்தரவு
சென்னை: அடுத்து வரும் 4 வாரங்களுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவையில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவர் வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி பொருத்தக் கோரி கோபிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்
அதில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை உள்ளிட்டவற்ற தடுக்க பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி பொருத்த தமிழக அரசுக்கு மனு அளித்தேன் ஆனால் இதுவரை தமது கோரிக்கைக்கு, தமிழக அரசு உரிய பதில் அளிக்கவில்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி அவர்களின் பாதுகாப்பான பயணத்தை பெற்றோர்கள், இணையதளம் மூலம் கண்காணிக்க வகை செய்ய வேண்டும்
இதற்காக தமிழக அரசுக்கு உாிய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். கடந்த விசாரணையின் போது மனுதாரரின் கோரிக்கை குறித்து விளக்கமளிக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமராக்களும், ஜிபிஎஸ் கருவிகளும் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை கூறியது.
மேலும் மேற்கண்டவை எல்லா நேரங்களிலும் சீராக இயங்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய பள்ளி நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தவிர ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கருவிகளின் மூலம், பள்ளி வாகனங்களை கண்காணிக்க தனியார் பள்ளிகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. இந்த அறிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம் அனைத்து தனியார் பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை ஒரு மாதத்திற்குள் பொருத்தி முடிக்க உத்தரவிட்டு வழக்கையும் முடித்து வைத்தது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications