30 நாள் தான் ‛டைம்’.. சென்னை மெடிக்கல்களில் இனி சிசிடிவி கட்டாயம்! கலெக்டர் உத்தரவு - பரபர பின்னணி
சென்னை: சென்னையில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் இனி சிசிடிவி கேமரா கட்டாயம். வரும் 30 நாட்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் வலி நிவாரணிகள் என்ற பெயரில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட மாத்திரைகள் மருந்தகங்களில் (மெடிக்கல்) சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க சென்னை மாவட்ட நிர்வாகம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து மருந்தகங்களிலும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது வலி நிவாரணிகள் பெயரில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட மாத்திரைகள் சேல்ஸ் செய்வதை தடுக்கவும், கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாத மருந்தக உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications