"தமிழ்நாட்டில் டெல்டா +".. தலைமை செயலாளர் இறையன்புவிற்கு வந்த அவசர லெட்டர்.. 3 மாவட்டங்களில் ஆக்சன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் மூன்று மாவட்டங்களில் டெல்டா + வைரஸ் பரவலுக்கு எதிராக அவசர ஆக்சன் எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா நோயாளிகளின் உடலில் எடுக்கப்பட்ட மாதிரிகளை இந்தியாவின் ஜீனோம் ஆராய்ச்சி அமைப்பான INSACOG ஆராய்ச்சி செய்து வருகிறது. டெல்டா + வகை பரவல் குறித்தும், புதிய உருமாறிய கொரோனா வகைகளை கண்டுபிடிக்கவும் இந்த ஜீனோம் ஆராய்ச்சியே உதவும்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இந்த மூன்று மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் என்று கருதப்படுகிறது. இங்கு கட்டுப்பாடுகளை அதிகரித்து டெஸ்டிங்கை உயர்த்தும் முடிவில் தமிழ்நாடு அரசு உள்ளது. டெல்டா + கேஸ்கள் மேலும் பரவாத வகையில் இங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட உள்ளது. தொடர்ந்து இங்கு கண்காணிப்புகள் அதிகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

இந்த அமைப்பின் ஆய்வின் படி தமிழ்நாட்டில் நேற்று காலை வரை 3 பேருக்கு டெல்டா + வகை கொரோனா இருந்தது. நேற்று மாலையே இதன் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசுக்கு இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சில பரிந்துரைகளை செய்துள்ளது.

பரிந்துரை

பரிந்துரை

தமிழ்நாட்டில் 9 கேஸ்கள் பதிவாகி உள்ளதால் இது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்புவிற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் புதிய வகை உருமாறிய கொரோனாவான் டெல்டா + பரவி வருகிறது. இது கவலையை ஏற்படுத்த கூடிய வகையான கொரோனா.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இதை variant of concern என்று குறிப்பிட்டு உள்ளோம். தமிழ்நாட்டில் 9 கேஸ்கள் இதுவரை பதிவாகி உள்ளது. இது வேகமாக பரவ கூடியது. monoclonal சிகிச்சை முறை இதற்கு எதிராக பலன் அளிக்க வாய்ப்பு குறைவு. அதனால் தமிழ்நாட்டில் டெல்டா + கொரோனா கேஸ்கள் பரவி உள்ள மதுரை, காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் உடனே கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்.

மக்கள்

மக்கள்

மக்கள் வெளியே செல்வதை கட்டுப்படுத்த வேண்டும். இந்த மூன்று மாவட்டங்களில் விதிமுறைகளை அதிகரிக்க வேண்டும். டெஸ்டிங்கை உயர்த்த வேண்டும். அதோடு வேக்சின் அளிப்பதை இந்த மாவட்டங்களில் உயர்த்த வேண்டும். முக்கியமாக இங்கு பாஸிட்டிவ் வர கூடிய மக்களில் சாம்பிள்களை INSACOG ஆராய்ச்சி மையத்திற்கு டெல்டா + சோதனைக்காக அனுப்ப வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

பரிந்துரை

பரிந்துரை

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இந்த மூன்று மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் என்று கருதப்படுகிறது. இங்கு கட்டுப்பாடுகளை அதிகரித்து டெஸ்டிங்கை உயர்த்தும் முடிவில் தமிழ்நாடு அரசு உள்ளது. டெல்டா + கேஸ்கள் மேலும் பரவாத வகையில் இங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட உள்ளது. தொடர்ந்து இங்கு கண்காணிப்புகள் அதிகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+