வங்கி ஊழியர்களே நினைத்த பார்க்காத திருப்பம்.. ஊதிய உயர்வு முதல் சலுகை வரை எல்லாமே மாறப்போகிறது?
சென்னை: நாட்டில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை நான்காகக் குறைக்கும் ( வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை) மத்திய அரசின் நடவடிக்கையால் என்ன மாதிரியான சிக்கல்கள் மற்றும் பாதகங்கள் வரும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
நாட்டில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளை 4 மிகப்பெரிய வங்கிகளாக மாற்றும் திட்டத்தினை மத்திய அரசு முன்னணி தீர்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 12 வங்கிகளை ஒருங்கிணைத்து நான்கு பெரிய வங்கிகளாக மட்டும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு விரும்புவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும், பெரிய, உலகத் தரம் வாய்ந்த வங்கிகளை உருவாக்குதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தான் மத்திய அரசு 12 வங்கிகளை நான்கு வரிகளாக மாற்ற திட்டமிட்டு இருக்கிறதாம். இதில் பல முக்கியமான பாதகங்களும் சிக்கல்களும் எழ வாய்ப்புள்ளது.
வங்கிகளை ஒன்றிணைப்பதால் பல உள்நாட்டு மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்கள் எழும். முதல் பிரச்சனை வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்டது. வங்கி ஊழியர்கள் மற்றும் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படும். வங்கிகள் இணைக்கப்படும்போது, ஒரே பணிக்கு அதிக ஊழியர்கள் இருப்பது தவிர்க்க முடியாதது. இது ஆட்குறைப்பு மற்றும் ஊழியர்களின் பணி இடமாற்றங்களுக்கு நிச்சயம் வழிவகுக்கும்.
பதவி உயர்வு பாதிப்பு
12 வங்கிகளில் பணியாற்றியவர்கள் நான்கு வங்கிகளில் பணியாளர்களாக இணைந்த பின்னர் அவர்களின் பணிமூப்பு அதாவது சீனியாரிட்டி குறைக்கப்படலாம். இதனால் ஊழியர்களின் பதவி உயர்வு வாய்ப்புகள் குறையும் என்ற அச்சம் உள்ளது
இதனால் வேலை இழப்பு மற்றும் பணிச்சூழல் மாற்றங்கள் பற்றிய அச்சத்தால் வங்கி ஊழியர் சங்கங்கள் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் ஈடுபட அதிகமாக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பொதுவாகவே வங்கி ஊழியர்கள், இப்படி வங்கிகளை இணைக்கும் செயல்களுக்கு கடந்த காலங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள்.
வாடிக்கையாளர்களுக்கு சிக்கல்கள்
12 பொதுத்துறை வங்கிகளை நான்கு பெரிய வங்கிகளாக இணைக்கும் போது வங்கிகளின் சேவை தொடர்ச்சியில் அவ்வப்போது சிக்கல்கள் வரலாம். வாடிக்கையாளரின் கணக்கு எண், வாடிக்கையாளர் ஐடி, IFSC குறியீடு மற்றும் செக் புத்தகம் ஆகியவை மாற்றப்படும். இந்த மாற்றங்களை வாடிக்கையாளர்கள் தங்கள் அனைத்து நிதி நிறுவனங்களுடனும் தொடர்புகொண்டு புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும், இது கால விரையம் மற்றும் சிரமத்திற்கு வழிவகுக்கும்.
வங்கி கிளைகள் குறையும்
அதேபோல் 12 பொதுத்துறை வங்கிகள் நான்கு வங்கிகளாக குறையும் போது, இணைப்பின் ஒரு பகுதியாக, நெருக்கமான இடங்களில் உள்ள கிளைகளும், லாபம் குறைவாக உள்ள கிராமப்புறக் கிளைகளும் மூடப்படும் அபாயங்கள் உள்ளது. இது தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்குச் சேவைகள் கிடைப்பதையே கேள்விக்குறியாகி விடும்.
வாராக் கடன்
பலவீனமான வங்கிகளை வலுவான வங்கிகளுடன் இணைக்கும்போது, பலவீனமான வங்கிகளின் வாராக்கடன் சுமை வலுவான வங்கிக்கு மாற்றப்படுகிறது. இதனால் இணைந்த வங்கியின் ஒட்டுமொத்த நிதி ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும்.
தொழில்நுட்ப சவால்கள்
இணைக்கப்படும் வங்கிகள் வெவ்வேறு மென்பொருள் தளங்களில் செயல்பட வாய்ப்புள்ளது. இந்தத் தொழில்நுட்ப அமைப்புகளை ஒன்றிணைக்க அதிக முதலீடு, கவனமான திட்டமிடல் மற்றும் அதிக காலம் வங்கிகளுக்கு நிச்சயம் தேவைப்படும்.
வலுவான வங்கிகளை பலவீனப்படுத்தும்
12 பெரிய பொதுத்துறை வங்கிகளை நான்கு மிக பெரிய வங்கிகளாக மாற்றும்போது , அதாவது பெரிய வங்கிகளை ஒன்றோடு ஒன்று இணைப்பதன் மூலம் பலவீனமான வங்கிகளால் பலமான வங்கிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இது பற்றி சில வல்லுநர்கள் கூறும்போது , இந்த இணைப்பு முறை, வலுவான வங்கிகளைப் பலவீனப்படுத்தி ஒட்டுமொத்த வங்கி அமைப்பையே குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
நிர்வாகச் சிக்கல்கள்
ஒவ்வொரு வங்கிக்கும் அதன் தனிப்பட்ட பணியிடக் கலாச்சாரம் மற்றும் நிர்வாக நடைமுறைகள் உள்ளன. இந்த வெவ்வேறு கலாச்சாரங்களை ஒருங்கிணைப்பது மிகவும் சவாலானது.
பெரிய அமைப்புகள் உருவாகும்போது, அதனை நிர்வாகம் செய்வது மற்றும் அன்றாடச் செயல்பாடுகளுக்கு இடையேயான தூரம் அதிகரிக்கலாம்.
சுருக்கமாக, வங்கிகளை நான்காகக் குறைக்கும் முயற்சி, ஒருவேளை பெரிய வங்கிகளை உருவாக்க உதவலாம். ஆனால், குறுகிய காலத்தில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நிதி ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் பெரிய சிக்கல்களையும் இடையூறுகளையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications