வருகிறது ஹைட்ரோ கார்பன் திட்டம்.. மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி.. டெல்டா மக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி அளித்து உள்ளது
சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி அளித்து உள்ளது. இது தொடர்பான ஆய்வு பணிகள் விரைவில் நடக்க உள்ளது.
லோக்சபா தேர்தல் தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது டெல்டா மக்களுக்கு அதிர்ச்சியான தகவல் ஒன்று வந்துள்ளது. அதன்படி ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் மீண்டும் உயிர்பெற்று இருக்கிறது.
நெடுவாசலில் இருந்து அகற்றப்பட்ட இந்த திட்டம் இப்போது வேறு மூன்று இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு இரண்டாம் கட்ட அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன்
ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பான அறிவிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியானது. இந்தியா முழுக்க மொத்தம் ஓஎன்ஜிசி சார்பாக 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது. 41 இடங்களில் வேதாந்தா நிறுவனம்தான் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. மீதமுள்ள இடங்களில் 4 நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்கிறது. தற்போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

என்ன அனுமதி
அதன்படி தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி அளித்து உள்ளது. ஓஎன்ஜிசியின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய சுற்றுசூழல்துறை அனுமதி அளித்துள்ளது.கடலூர், நாகையில் 40 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. மொத்தமாக 341 கிணறுகள் 40 இடங்களில் அமைக்கப்படும்.

ஆய்வு பணிகள்
இது தொடர்பான ஆய்வு பணிகள் விரைவில் நடக்க உள்ளது. இதற்காக ஆய்வு எல்லைகள் வரையறுக்கப்பட்டு உள்ளது. திட்டம் செயலுக்கும் வரும் இடத்தில் ஓஎன்ஜிசி ஆய்வு செய்யும். இதற்காக 41 இடங்களில் ஓஎன்ஜிசி ஆய்வு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.

யார் எல்லாம்
ஓஎன்ஜிசி நிறுவனம் வேதாந்தா நிறுவனமும் இதை இணைந்து செய்ய உள்ளது. தமிழகத்தில் நான்கு இடங்களில் முதற்கட்டமாக வேதாந்தா நிறுவனம் கிணறுகள் அமைக்கும். ஓஎன்ஜிசி தனது ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் வேதாந்த நிறுவனம் தனது பணிகளை தொடங்கும்.

அறிக்கை தாக்கல் செய்யும்
இந்த ஆய்வின் படி டெல்டா மாவட்டங்களில் நிலம் எப்படி இருக்கிறது, அங்கு தண்ணீர் எப்படி உள்ளது, திட்டத்தால் ஏற்படும் நன்மை, தீமைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் இதில் ஆய்வு செய்யப்படும். பின் அந்த ஆய்வு அறிக்கை மத்திய சுற்றுசூழல் துறைக்கு அளிக்கப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications