வருகிறது ஹைட்ரோ கார்பன் திட்டம்.. மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி.. டெல்டா மக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி அளித்து உள்ளது
சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி அளித்து உள்ளது. இது தொடர்பான ஆய்வு பணிகள் விரைவில் நடக்க உள்ளது.
லோக்சபா தேர்தல் தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது டெல்டா மக்களுக்கு அதிர்ச்சியான தகவல் ஒன்று வந்துள்ளது. அதன்படி ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் மீண்டும் உயிர்பெற்று இருக்கிறது.
நெடுவாசலில் இருந்து அகற்றப்பட்ட இந்த திட்டம் இப்போது வேறு மூன்று இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு இரண்டாம் கட்ட அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன்
ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பான அறிவிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியானது. இந்தியா முழுக்க மொத்தம் ஓஎன்ஜிசி சார்பாக 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது. 41 இடங்களில் வேதாந்தா நிறுவனம்தான் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. மீதமுள்ள இடங்களில் 4 நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்கிறது. தற்போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

என்ன அனுமதி
அதன்படி தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி அளித்து உள்ளது. ஓஎன்ஜிசியின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய சுற்றுசூழல்துறை அனுமதி அளித்துள்ளது.கடலூர், நாகையில் 40 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. மொத்தமாக 341 கிணறுகள் 40 இடங்களில் அமைக்கப்படும்.

ஆய்வு பணிகள்
இது தொடர்பான ஆய்வு பணிகள் விரைவில் நடக்க உள்ளது. இதற்காக ஆய்வு எல்லைகள் வரையறுக்கப்பட்டு உள்ளது. திட்டம் செயலுக்கும் வரும் இடத்தில் ஓஎன்ஜிசி ஆய்வு செய்யும். இதற்காக 41 இடங்களில் ஓஎன்ஜிசி ஆய்வு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.

யார் எல்லாம்
ஓஎன்ஜிசி நிறுவனம் வேதாந்தா நிறுவனமும் இதை இணைந்து செய்ய உள்ளது. தமிழகத்தில் நான்கு இடங்களில் முதற்கட்டமாக வேதாந்தா நிறுவனம் கிணறுகள் அமைக்கும். ஓஎன்ஜிசி தனது ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் வேதாந்த நிறுவனம் தனது பணிகளை தொடங்கும்.

அறிக்கை தாக்கல் செய்யும்
இந்த ஆய்வின் படி டெல்டா மாவட்டங்களில் நிலம் எப்படி இருக்கிறது, அங்கு தண்ணீர் எப்படி உள்ளது, திட்டத்தால் ஏற்படும் நன்மை, தீமைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் இதில் ஆய்வு செய்யப்படும். பின் அந்த ஆய்வு அறிக்கை மத்திய சுற்றுசூழல் துறைக்கு அளிக்கப்படும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications