அமித் ஷாவிற்கு "எண்டு கார்டு".. எந்த பதவியும் கொடுக்க கூடாது! மோடிக்கு நாயுடு வைத்த பெரிய கண்டிசன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் அந்த கட்சிக்கு கடுமையான பல சிக்கல்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் நேற்று வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress 2024 2024 politics

இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் இன்னும் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

சந்திரபாபு நாயுடு - நிதிஷ் கிங்: இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.

பாஜக ஆட்சி அமைக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாது.

இன்று சந்திர பாபு நாயுடு டெல்லி செல்ல உள்ளார். என்டிஏ கூட்டணி தலைவர்களுடன் சந்திர பாபு நாயுடு ஆலோசனை நடத்த உள்ளார்.

சந்திரபாபு நாயுடு கோரிக்கை: மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவிற்கு ஆதரவு தர வேண்டும் என்றால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் முக்கியமான சில கோரிக்கைகளை பாஜகவிற்கு வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1. அதன்படி ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு ஸ்டேட்டஸ் வேண்டும்.

2, ஆந்திராவில் புதிய தலைமையகம் அமைக்க சில லட்சம் கோடிகள் கேட்கப்படும்.

3. மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டும்.

4, அமித் ஷா உடன் சந்திரபாபு நாயுடுவிற்கு இருக்கும் மோதலால் அமித் ஷா உள்துறை அமைச்சர் ஆக கூடாது என்று நாயுடு ஏற்கனவே பாஜகவிடம் பிரஷர் கொடுத்துள்ளாராம்.

5. மத்திய அமைச்சரவையில் நிதி துறை, உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை நாயுடு பாஜகவிடம் கேட்க உள்ளார்.

6. நாயுடுவிற்கு ஆந்திராவில் ஆட்சி அமைக்க பாஜக ஆதரவே தேவை இல்லை. அங்கே 175 இடங்களில் 135 இடங்களில் நாயுடுவின் தெலுங்கு தேசம் வென்றுள்ளதால், பாஜக அங்கே அவர்களை மிரட்ட முடியாது.

இந்த கோரிக்கைகள் போக இன்னும் சில கோரிக்கைகளை நாயுடு வைக்க உள்ளாராம்., இதில் எல்லா கோரிக்கைகளையும் ஏற்க காங்கிரஸ் தயாராக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+