குட் நியூஸ்.. செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திராயன்-2.. இஸ்ரோ அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: செப்டம்பர் 7ம் தேதி நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்க உள்ளது என்று, இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

Chandrayaan 2 on course to land on the lunar south polar region on 7th September

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 7ம் தேதி சந்திரயான்-2 நிலவில் தரையிறங்க உள்ளது என்று டுவிட்டரில் இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுவரை சிறப்பாக பயணம் நடந்துகொண்டு உள்ளது. நிலவின் தென் துருவத்தில் செப்டம்பர் 7ம் தேதி சந்திரயான்-2 தரையிறங்க உள்ளது. இது பற்றி தொடர்ந்து அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியின் சுற்று வட்டப்பாதையிலிருந்து, சந்திரயான் - 2 விண்கலம் கடந்த 14ம் தேதி பிரிந்து, நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்றது. முன்னதாக, நிலவை அடைவதற்கான அதன் உயரம், ஐந்து முறை உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+