அடுத்த அப்டேட்! நிலவில் பிளாஸ்மா அளவீடு செய்த விக்ரம் லேண்டர்! கவனிக்கும் வெளிநாடுகள்! ஏன் முக்கியம்
சென்னை: நிலவின் தென்துருவத்தில் பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் முன்பு கணிக்கப்பட்ட அளவை விட குறைவான அளவில் இருப்பது துவக்க ஆய்வில் தெரியவந்துள்ளதாக மாஸான குட்நியூஸ் ஒன்றை தெரிவித்துள்ளது. இந்த பிளாஸ்மா என்றால் என்ன? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
நிலவின் தென்துருவத்தை சந்திரயான் -3 விண்கலம் ஆய்வு செய்து வருகிறது. நிலவின் தென்துருவத்தில் கடந்த 23ம் தேதி விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பிறகு அடுத்த 4 மணிநேரத்தில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வாகனம் வெளியே வந்து நிலவின் மேற்பரப்பில் கால்பதித்தது.

தற்போது விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை நிலவின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பிரக்யான் ரோவர் நிலவில் ஆக்சிஜன், சல்பர், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ் உள்பட பல தனிமங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது.
மேலும் ஹைட்ரஜன் இருக்கிறதா? என்பதை பிரக்யான் ரோவர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் விக்ரம் லேண்டர் ஆய்வில் புதிய தகவல் என்பது வெளிவந்துள்ளது. அதாவது நிலவில் மேற்பரப்பில் பிளாஸ்மாவின் இருப்பதாகவும், அதன் அளவு மிகவும் குறைந்த அளவில் இருப்பதாகவும் சூப்பரான தகவலை கண்டுபிடித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், ‛‛ரேடியோ அனாடமி ஆஃப் மூன் பவுண்ட் ஹைபர்சென்சிட்டிவ் அயனோஸ்பியர் மற்றும் அட்மாஸ்பியர் - லாங்முயர் ப்ரோப் (RAMBHA-LP) எனும் கருவி சந்திரயான் 3 லேண்டரில் உள்ளது. இந்த கருவி நிலவின் தென்துருவத்தில் பிளாஸ்மா அளவை முதல் முதலாக அளவீடு செய்துள்ளது. இந்த அளவீடு என்பது நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா என்பது முன்பு கூறியதை விட குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் விக்ரம் லேண்டர் கண்டுபிடித்துள்ள இந்த தகவல் என்பது விண்வெளி ஆய்வுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது பிளாஸ்மா என்பது நிலவின் மேற்பரப்பில் மின்காந்த அலைகளை உருவாக்கும் எலக்ட்ரான், புரோட்டான்கள் உள்ளிட்டவற்றின் அளவை குறிக்கும். அங்கு சூரிய வெப்ப காற்றின் காரணமாக நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா உருவாகிறது. பிளாஸ்மாவின் அளவு அதிகமாக இருந்தால் விண்வெளி ஆய்வு கலன்களுக்கான தகவல் தொழில்நுட்ப சேவைகள் என்பது பாதிக்கப்படும்.
தற்போது விக்ரம் லேண்டரின் ரம்பா -எல்பி கருவி பிளாஸ்மா அளவு குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இது நிலவில் ஆய்வு செய்யும் தொலைதொடர்பு கருவிகளை வடிவமைப்பதில் இன்னும் திறம்பட உதவலாம். தற்போது பிளாஸ்மா அளவை கணக்கீடு செய்த ரம்பா -எல்பி கருவி என்பது திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்பிஎல்/விஎஸ்எஸ்சியில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications