டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி தேர்வர்களுக்கு சென்னையில் சூப்பர் வாய்ப்பு.. தமிழக அரசே அதிரடி அறிவிப்பு
தமிழ்நாடு அரசு நடத்திடும், TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள், http://civilservicecoaching.com வாயிலாக 31.03.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
சென்னை: தமிழ்நாடு அரசு நடத்திடும், TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள், http://civilservicecoaching.com வாயிலாக 31.03.2023 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 7373532999, 9894541118 & 8667276684 எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி , எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போன்ற போட்டி தேர்வுகளில் வெற்றி பெற தரமான பயிற்சி பெற பல லட்சங்களை மக்கள் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. டிஎன்பிஎஸ்சி மற்றும் வங்கி தேர்வுகளில் வெல்ல விரும்பும் ஏழை மாணவர்களுக்கும் சரி, மத்திய அரசு பணிகளுக்கு போக விரும்பும் மாணவர்களுக்கும் சரி, அவர்களுக்கு வேண்டியது முறையான மற்றும் சரியான பயிற்சி தான்.
அதை அரசே சென்னையில் இலவசமாக தர முடிவு செய்துள்ளது. இந்த வசதியை பெற விரும்பும் மாணவர்கள் தாரளமாக அரசின் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

போட்டித்தேர்வு
தமிழக தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு போட்டித்தேர்வுகள் பயிற்சி மையத்தில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் (TNPSC, SSC, IBPS, RRB etc) போட்டித்தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது

கட்டணம் இல்லா பயிற்சி
TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழசு அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது -

தங்கும் இடம் இல்லை
மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு. 01- 01-2023 அன்று 18 என்பது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை.

இணையதள முகவரி
பயிற்சியில் சோ விரும்பும் தேர்வர்கள், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம்//www.civiervicecoaching.com வாயிலாக 15.03.2023 முதல் 31.03.2023 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதன முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7373532998, 9894541718, 8657270684 மற்றும் 8489334419 ஆகிய அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்

தேர்வகள் எப்படி
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு தேர்வர்களின் விரங்கள்! மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பெயரியிடப்படும். 1004.2023 முதல் பயிற்சி வருப்புகள் தொடங்கப்படும் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications