சென்னையில் நாளை மின்தடை.. எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது என்பது குறித்து முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது. கோவிலம்பாக்கம் பகுதியில் ராகவா நகர் (எஸ்.கொளத்தூர் மெயின் ரோடு), பால்வாடி, மேடவாக்கம் மெயின் ரோடு, கடப்பாக்கல், வைத்தியலிங்கம் நகர், ராஜிவி நகர் 6-வது தெரு, அப்பல்லோ விடுதி, ஸ்ரீராம் பிளாட் உள்பட பல பகுதிகளிலும். ஐயப்பன் தாங்கல் பகுதியில் காட்டுப்பாக்கம், செந்துராபுரம், ஸ்ரீநகர், விஜயலட்சுமி நகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் நாளை காலை மின்சாரம் இருக்காது.

சென்னையில் ஜனவரி 3ம் தேதியான நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஐயப்பன்தாங்கல், கோவிலம்பாக்கம் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும். மின்சாரம் துண்டிக்கப்படும் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2 மணிக்கு மேல் மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

chennai power cut electricity

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "ஐயப்பன்தாங்கல்: காட்டுப்பாக்கம், செந்துராபுரம், ஸ்ரீநகர், விஜயலட்சுமி நகர், ஜானகியம்மாள் நகர், ஸ்வர்ணபுரி நகர், அடிஷன் நகர், சீனிவாசபுரம், கிருஷ்ணா நகர், மாருதி நகர், நோம்பல், மவுண்ட் பூந்தமல்லி சாலை, ஆயில் மில் சாலை, ஆட்கோ நகர், ஐயப்பன்தாங்கல், சுப்பையா நகர், கிருஷ்ணவேணி அம்மாள் நகர், வசந்தம் நகர், சிவராம கிருஷ்ணா நகர், விஜயலட்சுமி அவென்யூ.

கோவிலம்பாக்கம்: ராகவா நகர் (எஸ்.கொளத்தூர் மெயின் ரோடு), பால்வாடி, மேடவாக்கம் மெயின் ரோடு, கடப்பாக்கல், வைத்தியலிங்கம் நகர், ராஜிவி நகர் 6-வது தெரு, அப்பல்லோ விடுதி, ஸ்ரீராம் பிளாட், ஏ.ஆர்.ஆர் பிளாட், நாஞ்சில் பிளாட், தினகரன் தெரு, மணியம்மை தெரு, வெள்ளக்கல் பஸ் ஸ்டாண்ட், கண்ணதாசன் தெரு, அண்ணா தெரு, பாரதி தெரு, காந்தி தெரு, பொன்னியம்மன் காலடி 1 முதல் 5-வது தெரு, கலைஞர் நகர், வீரபாண்டி நகர் 1 முதல் 10-வது தெரு, ராணி நகர், அம்பேத்கர் சாலை, முத்தையா நகர், விவேகானந்தர் தெரு, ராஜீவ் காந்தி நகர், பெருமாள் நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்" இவ்வாறு தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே ஐயப்பன்தாங்கல் பகுதியில் உள்ளவர்கள், கோவிலம்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள், குழம்பு மற்றும் சட்னி அரைப்பது, தண்ணீருக்காக மோட்டார் போடுவது போன்றவற்றை காலை 9 மணிக்கு முன்பே செய்துவிட்டால் சிறப்பானதாக இருக்கும். அல்லது மின்சாரம் வரும் வரை காத்திருக்க வேண்டியது வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+