சென்னை அருகே மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பறிப்பு ஏன்? செங்கல்பட்டு கலெக்டர் அதிரடி
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியின் தலைவராக வீராசாமி என்பவர் 2021-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னிச்சையாக செயல்படுவது, ஊராட்சி நிதியில் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னையை ஒட்டியுள்ள ஊராட்சிகள் எல்லாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல ஊராட்சிகளில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. நிலத்தின் மதிப்பு உயர்ந்து விட்டது. இது ஒரு புறம் எனில், அங்குள்ள பல ஊராட்சிகளில் நகராட்சிக்கு நிகராக மக்கள் தொகை உயர்ந்து விட்டது.

இதனால் அங்கு சாலை வசதி, குடிநீர் வசதி, குப்பைகள் அகற்றும் வசதி, தெருவிளக்கு, பூங்கா, பாதாள சாக்கடை வசதி, ரேஷன் கடை, சமூக நலக்கூடங்கள் உள்பட பல்வேறு வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டியதாக இருக்கிறது. இதற்காக அங்கு நிதி ஒதுக்கீடும் அதிகமாக உள்ளது. இந்நிலையில ஒரு சில ஊராட்சிகளில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அந்த விவகாரத்தில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியின் தலைவராக வீராசாமி என்பவர் 2021-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து துணைத் தலைவராக லோகேஸ்வரி என்பவர் தேர்வானார். இந்த நிலையில் தன்னிச்சையாக செயல்படுவது, ஊராட்சி நிதியில் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி வரப்பெற்ற புகார் மனுவின் மீது செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
மேலும் நிதி செலவினத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, இதுகுறித்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்களின் விளக்கத்தை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் ஊராட்சி கணக்குகள் முடக்கப்பட்டன.
இதனால் 31.8.2023 அன்று காசோலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் கையெழுத்திடும் அதிகாரம், பறிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தலைவர் மீது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் இது குறித்து வண்டலூர் தாசில்தார் விசாரணை மேற்கொண்டு மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து மாம்பாக்கம் ஊராட்சி தலைவரின் பதவியை நீக்கக்கோரி, கவுன்சிலர்கள், ஊரக வளர்ச்சி துறை கமிஷனரை சந்தித்து மனு கொடுத்தனர். இதுசம்பந்தமாக விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது. இந்நிலையில் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கத்திற்கான அறிக்கை, தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications