7 தோட்டாக்களுடன் காணாமல் போன கை துப்பாக்கி.. சென்னையில் பரபரப்பு சம்பவம்.. போலீஸ் விசாரணை
சென்னை: சென்னை மதுரவாயலில் கை துப்பாக்கியை காணவில்லை என பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் புகார் அளித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உயிரைப்பறித்த தீபாவளி மது விருந்து ... மதுபானம் அருந்திய 3 நண்பர்கள்... அடுத்தடுத்து பலி
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தார் கோபாலகிருஷ்ணன். இவர் சென்னையில் மதுரவாயல் உட்பட 5 இடங்களில் இவர் பெட்ரோல் பங்குகளை நடத்தி வருகிறார். தனது பாதுகாப்பிற்காக முறையான லைசன்ஸ் பெற்று இவர் துப்பாக்கி ஒன்றை வைத்து இருந்தார்.
தீபாவளி
பெட்ரோல் பங்க் உரிமையாளர் என்பதால் சக பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு நேற்று தீபாவளியை முன்னிட்டு இவர் இனிப்புகள் கொடுக்க காரில் சென்றுள்ளார். அதன்பின் நேற்று பிற்பகலில் அசோக் பில்லரில் உள்ள தனது நண்பர் அமர்நாத் என்பவரை பார்ப்பதற்காக தனது சொந்த காரில் தனது மைத்துனர் பகத்சிங் என்பவருடன் சென்றுள்ளார்.
போலீஸ்
அப்போது இவர் தனது காரின் முன் பக்கம் இருந்த பேனட்டில் லைசன்ஸ் பெற்ற துப்பாக்கியை வைத்து இருந்தார். பாதுகாப்பிற்காக இவர் துப்பாக்கியை எடுத்துச்சென்றுள்ளார். இதை காரிலேயே வைத்துவிட்டு நேற்று தூங்கியவர் இன்று காலை காரை திறந்து பார்த்ததும் துப்பாக்கி இல்லாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இன்று காலை 09.00 மணிக்கு லாக்கரில் வைப்பதற்காக காரில் தேடியபோது துப்பாக்கியை காணவில்லை.
விதி
இதையடுத்து உடனடியாக இவர் மதுரவாயல் போலீசாரிடம் புகார் அளித்தார். தனது கை துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பி வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதில் 7 குண்டுகள் இருந்துள்ளன. 32 NP bore pistol வகை துப்பாக்கி காணாமல் போய்விட்டதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். விதிமுறைப்படி லைசன்ஸ் துப்பாக்கி காணாமல் போனால் உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும்.
புகார்
இதனால் அவர் T4 மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேற்படி புகாரைப் பெற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். 7 குண்டுகளோடு துப்பாக்கி ஒன்று காணாமல் போன சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் இது தொடர்பாக தற்போது தீவிர விசாரணை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இவரின் கார் சென்ற இடங்களில் எல்லாம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.