Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாறுமாறாக போன.. ரேபிடோ பைக் டாக்சி டிரைவர்.. பிறந்த நாளிலேயே இறந்த பெண்.. சென்னையில் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ரேபிடோ பைக் டாக்ஸியில் பயணித்த பெண் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிய பெண் ஊழியர் சாலை விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் பைக் டாக்சி பிரபலமாக உள்ளது. கார், ஆட்டோவில் அதிக கட்டணம் வசூலிப்பதால் பைக் டாக்சியை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

Chennai: A Rapido driver met with an accident, woman passenger dies in the spot

ஆனால் பெங்களூர், சென்னையில் பைக் டாக்சி இன்னும் சட்டப்படி அனுமதிக்கப்படவில்லை . அதாவது பைக்கை கமர்ஷியல் விஷயங்களுக்கு பயன்படுத்த முடியாது.

இதனால் பைக் டாக்சி என்பதே சட்ட விதிமீறல்தான். பைக் டாக்சிக்கள் இந்த விதி முறையையும் மீறித்தான் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. பல்வேறு மாநில அரசுகளும் இந்த பைக் டாக்சிகள் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதால் பெரிதாக கண்டுகொள்ளப்படுவது இல்லை.

இந்த பைக் டாக்சி பெண்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வேகமாக செல்ல முடியும். இதற்கு பணம் மிக குறைவு,. அதேபோல் டிராபிக்கில் எளிதாக செல்ல முடியும்.

பெங்களூர் போன்ற டிராபிக் அதிகம் உள்ள, கேப்பிற்கு அதிகம் காசு கேட்கும் நகரங்களில் இந்த பைக் டாக்சிகள் அதிக உதவுகின்றன. இந்த நிலையில்தான் சென்னையில் ரேபிடோ பைக் டாக்ஸியில் பயணித்த பெண் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிய பெண் ஊழியர் சாலை விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் இரண்டாவது தெருவில் வசித்து வந்தார் சேவிகா. 34 வயதாகும் இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இன்று சேவிகாவிற்கு பிறந்தநாள். இதையடுத்து பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று சேவிகா தனது தோழிகள் வீட்டிற்கு நேற்று இரவு சென்றுள்ளார். வியாசர்பாடியில் இருந்து தி நகருக்கு சேவிகா சென்றுள்ளார்.

இரவு முழுக்க பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பின் அதிகாலை மீண்டும் வீட்டிற்கு திரும்ப சேவிகா பைக் டாக்சி புக் செய்துள்ளார். ரேபிடோ பைக் டாக்சியை அவர் புக் செய்ததாக கூறப்படுகிறது.

அவரை ஆனந்தன் என்பவர் பிக் அப் செய்துள்ளார். இந்த நிலையில் ஹெல்மெட் அணியாமல் சேவிகா பின் பக்கத்தில் அமர்ந்து இருந்தார். அதிகாலையிலேயே சேவிகா வீடு திரும்ப பைக் டாக்சி புக் செய்த நிலையில் சாலையில் டிராபிக் இல்லாத காரணத்தால் ஆனந்தன் வேகமாக பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது அண்ணா சாலை காமராஜர் அரங்கம் அருகே டிப்பர் லாரி மோதி சேவிகா - ஆனந்தன் இருவரும் தூக்கி வீசப்பட்டு உள்ளனர். இதில் ஆனந்தன் சிறு காயங்களுடன் தப்பித்தார். கை, கால்களில் சிராய்ப்புடன் தப்பித்தார்.

ஆனால் சேவிகா அங்கேயே தலையில் அடிபட்டு உயிருக்கு போராடி இருக்கிறார். அங்கே இருந்த மக்கள் அவரை உடனடியாக அழைத்துக்கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே சேவிகா மரணம் அடைந்துவிட்டார்.

பைட் டாக்ஸி டிரைவரான ஆனந்தன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் மீது மோதிய டிப்பர் லாரி சம்பவ இடத்தில் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பைக் டாக்ஸி சேவையை தடை செய்ய வேண்டும் என்று ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் வலியுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில்தான் இந்த சம்பவம் அங்கே நடந்து உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+