ஏடிஎம்க்கு பணம் நிரப்பும் நிறுவன காவலாளி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது.. சென்னையில் பரபரப்பு
சென்னை: சேத்துப்பட்டு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் காவலாளி எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார்.
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியினை தனியார் நிறுவனங்கள் தான் செய்து வருகின்றன.

துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன், பாதுகாப்பான வாகனத்தில் கோடிக்கணக்கான பணத்தை எடுத்து சென்று ஏடிஎம் இயந்திரங்களில் வைக்கின்றன. இதேபோல் தானியங்கி ஏடிஎம் இயந்திரங்களில் வாடிக்கையாளர்கள் வைக்கப்பட்ட பணத்தை வங்கிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியையும் செய்து வருகின்றன.
இந்த பாதுகாப்பு வாகனங்கள் பல்வேறு வசதிகள் கொண்டவை ஆகும்.யாரும் எளிதாக கொள்ளை அடித்துவிட முடியாது. தப்ப முடியாது. பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருப்பதால் எளிதில் யாரும் கொள்ளை அடிக்கும் நோக்கில் நெருங்க முடியாது.
இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டில், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் காவலாளியாக ராணா சிங் என்பவர் பணியாற்றி வருகிறார். இன்று காலை ராணா சிங் தனது துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்தது. அந்த குண்டு மின்னல் வேகத்தில் காவலாளி ராணா சிங்கின் வயிற்றில் பாய்ந்தது. அதில், பலத்த காயமடைந்த ராணாசிங், உடனடியாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications