கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம்.. சென்னையில் கணவனை உயிருடன் எரித்துக் கொன்ற மனைவி
சென்னை: சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகரில் கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவன் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூங்கி கொண்டிருந்த கணவன் மீது நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றிய மனைவி, தீக்குச்சியை அவர் மீது கொளுத்திப்போட்டுள்ளார். அப்படியே அவர் அலறிக்கொண்டிருக்கையில், வெளிக்கதவை பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்
சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகர் கைவேலி பகுதியை சேர்ந்தவர் பாண்டி (42). இஸ்திரி போடும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பார்வதி (34). அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் பார்வதிக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.

உறவு நீடிப்பு
இதுபற்றி அறிந்த பாண்டி, தனது மனைவி பார்வதியை திட்டியதுடன் கடுமையாக கண்டித்துள்ளார். எனினும் பார்வதி தனது கள்ளக்காதலனை கைவிட மனது இல்லை. தொடர்ந்து உறவு நீடித்து வந்துள்ளது. இதனால் பார்வதிக்கும், பாண்டிக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

தீ வைத்து எரிப்பு
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மனைவி கணவனை கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் சேர முடிவு செய்தார். பார்வதி நேற்று முன்தினம் மாலை கணவன் வீட்டில் தூங்கியபோது, அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு அறையின் வெளி கதவையும் பூட்டியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி
உடல் முழுவதும் தீப்பற்றிய பாண்டி அலறி துடித்து கருகினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து ஆபத்தான நிலையில் இருந்த பாண்டியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

கணவன் வாக்குமூலம்
உயிருக்கு போராடிய அவரிடம் எழும்பூர் நீதிமன்ற நடுவர் வாக்குமூலத்தை பதிவு செய்தார். அதில், தனது மனைவி பார்வதி தன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறியிருக்கிறார் இந்நிலையில் பாண்டி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனையடுத்து, பார்வதி மீது கொலை வழக்கு பதிந்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications