சென்னையில் 6 விமானங்கள் ரத்து! திடீர் அறிவிப்பால் பயணிகள் அவதி!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று 6 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
நிர்வாக காரணங்களாலும், போதிய பயணிகள் இல்லாமலும் இந்த 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று இரவு 9 மணிக்கு சென்னை - கோழிக்கோடு ஸ்பைஸ்ஜெட் தனியார் பயணிகள் விமானம், இரவு 8.35 மணிக்கு சென்னை - கொச்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், மாலை 3 மணிக்கு சென்னை - சிவமுகா ஸ்பைஸ் ஜெட் தனியார் பயணிகள் விமானம் ஆகிய 3 புறப்பாடு விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் கோழிக்கோட்டில் இருந்து சென்னை வரும் ஸ்பைஸ்ஜெட் தனியார் பயணிகள் விமானம், அந்தமானில் இருந்து சென்னை வரும் ஆகாஷா ஏர் லைன்ஸ் பயணிகள் விமானம், சிவமுகாவிலிருந்து சென்னை வரும் ஸ்பைஸ்ஜெட் தனியார் பயணிகள் விமானம் ஆகிய 3 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து விமான நிறுவனங்கள் தரப்பில் கூறுகையில், நிர்வாக காரணங்கள் காரணமாகவும், போதிய பயணிகள் இல்லாததாலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்களில் பயணிக்க முன் பதிவு செய்திருந்த பயணிகளுக்கு, ஏற்கனவே தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications