இந்தியாவிலேயே ஒரே ஏர்போர்ட்! நேரம் தவறாமையில் சென்னைதான் பெஸ்ட்! உலக அளவில் என்ன ரேங்க் தெரியுமா?
சென்னை: உலகளவில் நேரம் தவறாமை மற்றும் இதர பிறகு வசதிகளை கொண்ட விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் 8 வது இடத்தை பிடித்து இருக்கிறது.
விமான போக்குவரத்து, விமானத்துறை, விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள், அதன் வருவாய் தொடர்பான விபரங்களை வழங்கி வருகிறது சிரியம் என்ற ஆய்வு நிறுவனம். இந்த நிறுவனம் உலகளவில் இயங்கி வரும் பெரிய விமான நிலையங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு கடந்த ஜனவரி மாதம் முடிவுகளை வெளியிட்டது.

சென்னை விமான நிலையத்துக்கு 8 வது இடம்
இந்த பட்டியலில் அமெரிக்காவின் மியாமி விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவின் ஃபுகுவோகா விமான நிலையம் 2 வது இடத்தையும் ஜப்பானின் ஹனேஜா விமான நிலையம் 3 வது இடத்தையும் பிடித்துள்ளன. இதில் சென்னை விமான நிலையம் 8 வது இடத்தை பிடித்து இருக்கிறது.

இந்தியாவிலேயே சென்னைதான் பெஸ்ட்
70 சர்வதேச விமான பாதைகளை ஆய்வு செய்த சிரியம் அதில் சென்னை விமான நிலையத்தில் 89.32% சரியான நேரத்தில் விமானங்க 70 சர்வதேச விமான பாதைகளை ஆய்வு செய்த சிரியம் அதில் சென்னை விமான நிலையத்தில் 89.32% சரியான நேரத்தில் விமானங்கள் புறப்படுவதாக தெரிவித்து உள்ளது. சிரியம் வெளியிட்டு இருக்கும் இந்த பட்டியலில் இந்தியாவிலேயே சென்னை விமான நிலையம் மட்டுமே இடம்பிடித்து உள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் வெளியானவுடன் சென்னை விமான நிலைய அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ள் புறப்படுவதாக தெரிவித்து உள்ளது. சிரியம் வெளியிட்டு இருக்கும் இந்த பட்டியலில் இந்தியாவிலேயே சென்னை விமான நிலையம் மட்டுமே இடம்பிடித்து உள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் வெளியானவுடன் சென்னை விமான நிலைய அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விமான நிலைய இயக்க முறையே காரணம்
இதுகுறித்து சென்னை விமான நிலைய இயக்குநர் ஷரத் குமார் தெரிவிக்கையில், "எங்கள் விமான நிலைய இயக்க முறையே இந்த நற்பெயருக்கு காரணம். பங்குதாரரின் ஈடுபாடு, கூட்டு முடிவு, வாடிக்கையாளர் நலன் மற்றும் தொழில்துறையினரின் நம்பிக்கையை பெற்றது எங்கள் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. விமான நிலையத்தின் தரத்தையும், வசதிகளையும் மேம்படுத்த தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

மேம்படுத்தப்படும் சென்னை ஏர்போர்ட்
பயணிகளுக்கு உதவும் வகையில் விமான நிலைய இயக்க முறையை மேம்படுத்தவும் முயற்சித்து வருகிறோம். கார் பார்க்கிங் வசதியை வரும் மாதங்களில் மேம்படுத்தவும், ஒருங்கிணைந்த டி2 முனையத்தை செயல்படுத்தவும் உள்ளோம். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை விமான நிலைய இயக்கக முறையை திட்டமிடும் வகையில் புதிய வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன." என்றார்.

கொரோனா பரவலில் அரும்பணியாற்றிய சென்னை ஏர்போர்ட்
கடந்த 2020 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக பன்னாட்டு விமான சேவைகள் துண்டிக்கப்பட்டன. சென்னை விமான நிலைய பணிகளும் முடங்கின. அதே நேரம் வெளிநாட்டில் சிக்கித் தவித்த இந்திய தொழிலாளர்களை மீட்பதற்காக சென்ற சிறப்பு விமானங்களும் நேரம் தவறாமல் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மக்களின் நற்பெயரை பெற்றன.












Click it and Unblock the Notifications