Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் பயங்கரம்.. பிரபல மதுபான விடுதி இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல தனியார் பப்பின் (மதுபான விடுதி) மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகி உள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் பிரபலமான ஷேக்மேட் ‛பப்' (மதுபான விடுதி) உள்ளது. தற்போது ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. இதனால் இந்த பப்பில் ஐபிஎல் போட்டிக்கான சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. இதனால் மாலை நேரத்தில் பப்பில் கூட்டம் என்பது அலைமோதும்.

Chennai Alwarpet pub roof collapsed and killed 2 person

இந்நிலையில் தான் வழக்கம்போல் இன்றும் பப் செயல்பட்டு வந்தது. ஊழியர்கள், பணியாளர்கள் வேலையில் இருந்தனர். இந்நிலையில் தான் இன்று இரவில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் ‛பப்' மேற்கூரை இடிந்து விழுந்தது.

இதில் ‛பப்'பில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதை பார்த்தவுடன் அந்த பகுதியில் உள்ளவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி வாகனம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டு மீட்பு பணி நடந்ததும். மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கி 3 பேர் இறந்தது தெரியவந்தது. இவர்கள் பப்பில் வேலை செய்து வந்த நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்துள்ளனர்.

இதில் 2 பேர் மணிப்பூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 3 பேரின் உடல்களை மீட்ட மீட்பு படையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கட்டட இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கி உள்ளனரா? என்பது தொடர்பாக தேடும் பணி நடந்து வருகிறது.

மேலும் விபத்துக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் மெட்ரோ சுரங்க பணியால் விபத்து நடந்ததா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது பப் அமைந்துள்ள இடத்தின் சற்று தொலைவில் மெட்ரோ சுரங்க பாதைக்கான பணி நடந்து வருகிறது. இந்த பணியின் காரணமாக ஏற்பட்ட அதிர்வால் பப் மேற்கூரை இடிந்து விழுந்ததா? என்பது பற்றியும் விசாரணை தொடங்கி உள்ளது. இதுபற்றி சென்னை அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+