சென்னையில் எஸ்ஐ செய்த எக்குத்தப்பான வேலை.. மெக்கானிக்கின் பார்வை பறிபோனது.. பக்கா ஸ்கெட்ச்
சென்னை: சென்னையில் நிலத்தகராறில் ரவுடியை அனுப்பி மெக்கானிக்கை தீர்த்து கட்ட திட்டமிட்டதாக சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் வக்கீல் உள்பட 3 பேரை செங்குன்றம் காவல்துறையினர் கைது செய்தனர். ரவுடி தாக்கியதால் கார் மெக்கானிக் பார்வை பறிபோனது.
சென்னை பேசின்பிரிட்ஜ் தங்கசாலை பகுதியை சேர்ந்த 27 வயதாகும் தீபேஷ், செங்குன்றத்தை அடுத்த தண்டல் கழனி பகுதியில் கார் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் 4-ந்தேதி குடிபோதையில் வந்த 2 பேர் தீபேசை கொடூரமாக தாக்கி உள்ளார்கள்.என்ன காரணத்திற்காக தாக்கினார்கள் என்பது தெரியவில்லை.
தீபேஷ்க்கு வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். ஆனால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போதும், தீபேஷ்க்கு கண் பார்வை பறிபோய்விட்டது.
இதுபற்றி சென்னை செங்குன்றம் காவல் ஆய்வாளர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்தார்கள். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மர்மநபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து ரவுடி சந்திரன்(28) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில்,அண்ணாநகர் போக்குவரத்து பிரிவில் சப்-இன்ஸ்பெக்டர் ஏற்பாட்டில் ரவுடி வந்து தீபேசை தாக்கி உள்ளதாக தெரியவந்தது.
மெக்கானிக் தீபேசுக்கும், அவருடைய உறவினரான சென்னை அண்ணாநகர் போக்குவரத்து பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வரும் 52 வயதாகும் ஜெயக்குமார் என்பவருக்கும் தண்டல் கழனியில் உள்ள நிலம் சம்பந்தமாக தகராறு இருந்தது.
நிலத்தகராறு விஷயத்தில் பிரச்சனை தீராத காரணத்தால தீபேஷை தீர்த்துகட்ட ஜெயக்குமாரும் அவரது நண்பரான வக்கீல் ஜமீத் ரபி என்பவரும் முடிவு செய்தார்கள். இதன்படியே ரவுடி சந்திரன் உள்பட 2 பேரை அனுப்பி தீபேசை தாக்கச்சொன்னதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், வக்கீல் ஜமித் ரபி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். ரவுடியுடன் வந்து தாக்கிவிட்டு தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications