சென்னை அண்ணா சாலை குண்டுவீச்சு சம்பவம்.. 6 பேர் தாம்பரம் நீதிமன்றத்தில் சரண்
சென்னை: சென்னை அண்ணாசாலையில் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக 6 பேர் தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
Recommended Video
சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து தேனாம்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு மர்மநபர்கள் கடந்த மார்ச் 3ம் தேதி நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த நபர் வெடிகுண்டுகளை ஒரு காரின் மீது வீசினார். அந்த கார் வேகமாக சென்றுவிட்டதால் இரு நாட்டு வெடிகுண்டுகளும் கீழே விழுந்து வெடித்து சிதறின.இதில் அருகில் இருந்து காரின் கண்ணாடியும், ஷோருமின் கண்ணாடியும் சேதமடைந்தது.

இந்த குண்டுவீச்சை நிகழ்த்திய மர்ம நபர்கள் மேயர் சுந்தர்ராவ் சாலையில் புகுந்து தப்பிவிட்டனர். தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்பட உயர் அதிகாரிகளும் வந்து ஆய்வு நடத்தினர்.
அதன்பின்னர் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு நடத்தியதில் கதீட்ரல் சாலை வழியாக அண்ணாசாலை நோக்கி சென்ற காரினுள் இருந்த ரவுடியை கொல்வதற்காக குறிவைத்தே வெடிகுண்டை வீசியிருப்பது தெரியவந்தது. இந்த காரினை 4 இருசக்கர வாகனங்களில் 8பேர் பின் தொடர்ந்து வந்ததும் சிசிடிவியில் தெரியவந்தது.
இதையடுத்தது 3 தனிப்படைகள் அமைத்த காவல்துறையினர் சம்பவத்தில் தொடர்புடைய 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேரை தீவிரமாக தேடி வந்தனர் .
இந்நிலையில் குண்டு வீச்சு தொடர்பாக சென்னை தாம்பரம் நீதிமன்றத்தில் இன்று 6 பேர் சரண் அடைந்துள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications