சென்னை அண்ணா சாலை குண்டுவீச்சு சம்பவம்.. 6 பேர் தாம்பரம் நீதிமன்றத்தில் சரண்
சென்னை: சென்னை அண்ணாசாலையில் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக 6 பேர் தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
Recommended Video
சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து தேனாம்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு மர்மநபர்கள் கடந்த மார்ச் 3ம் தேதி நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த நபர் வெடிகுண்டுகளை ஒரு காரின் மீது வீசினார். அந்த கார் வேகமாக சென்றுவிட்டதால் இரு நாட்டு வெடிகுண்டுகளும் கீழே விழுந்து வெடித்து சிதறின.இதில் அருகில் இருந்து காரின் கண்ணாடியும், ஷோருமின் கண்ணாடியும் சேதமடைந்தது.

இந்த குண்டுவீச்சை நிகழ்த்திய மர்ம நபர்கள் மேயர் சுந்தர்ராவ் சாலையில் புகுந்து தப்பிவிட்டனர். தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்பட உயர் அதிகாரிகளும் வந்து ஆய்வு நடத்தினர்.
அதன்பின்னர் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு நடத்தியதில் கதீட்ரல் சாலை வழியாக அண்ணாசாலை நோக்கி சென்ற காரினுள் இருந்த ரவுடியை கொல்வதற்காக குறிவைத்தே வெடிகுண்டை வீசியிருப்பது தெரியவந்தது. இந்த காரினை 4 இருசக்கர வாகனங்களில் 8பேர் பின் தொடர்ந்து வந்ததும் சிசிடிவியில் தெரியவந்தது.
இதையடுத்தது 3 தனிப்படைகள் அமைத்த காவல்துறையினர் சம்பவத்தில் தொடர்புடைய 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேரை தீவிரமாக தேடி வந்தனர் .
இந்நிலையில் குண்டு வீச்சு தொடர்பாக சென்னை தாம்பரம் நீதிமன்றத்தில் இன்று 6 பேர் சரண் அடைந்துள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications