பெரிய திருப்பம்! அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு.. 3.5 கிலோ தங்கம் மீட்பு
சென்னை: அரும்பாக்கம் தனியார் வங்கி நகை கொள்ளை விசாரணையில் முக்கிய திருப்பம் அரங்கேறி உள்ளது.
Recommended Video
சென்னையில் அரும்பாக்கம் 100 அடி சாலையில் பெடரல் வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த வங்கியில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
தலைநகரில் இருக்கும் வங்கியில், அதுவும் பட்டப்பகலிலேயே இப்படியொரு கொள்ளை சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் உடனடியாக விசாரணையில் குதித்தனர்.

கொள்ளை
கடந்த வாரம் அரும்பாக்கம் பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவில் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். இரு சக்கர வாகனத்தில் வாடிக்கையாளர்கள் போல வங்கிக்கு வந்த அவர்கள், முதலில் காவலாளிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கொடுத்துள்ளனர். அவர் மயங்கிய பின்னர், வங்கியில் ஊழியர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டி கழிவறையில் கட்டிப்போட்டனர்.

நகை
அதைத் தொடர்ந்து லாக்கரை உடைத்து வங்கியில் இருந்த பல கோடி மதிப்பிலான நகைகளைக் கொள்ளை அடித்தனர். சுமார் 32 கிலோ தங்க நகைகள் வங்கியில் இருந்து திருடப்பட்டது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் அந்த வங்கியில் பணிபுரிந்த ஊழியரே நண்பர்களுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

விசாரணை
இதையடுத்து வழக்கு விசாரணைக்காக மொத்தம் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. வங்கியில் கொள்ளை அடித்த பின்னர், பைக் மூலம் தப்பிச் சென்ற சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். வழக்கைச் சிறப்பாக விசாரித்த அதிகாரிகள் மிக விரைவில் நான்கு குற்றவாளிகளைக் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 28 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

போலீஸ் அதிகாரி
இந்தச் சூழலில் இந்தச் சம்பவத்தில் திடீர் திருப்பமாக இந்த கொள்ளை சம்பவத்தில் போலீசாருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அச்சரபாக்கம் போலீஸ் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து இப்போது 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கி கொள்ளையர்கள் உடன் ஆய்வாளர் அமல்ராஜ் தொடர்பில் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications