சென்னை பட்ஜெட் 2025.. ஃபுட் கோர்ட் டூ பேட்மிண்டன் கோர்ட் வரை.. இளைஞர்களை கவர்ந்த அறிவிப்புகள்!
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சிக்கான பட்ஜெட்டில் இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஃபுட் கோர்ட் அமைத்தல், டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி, பூங்காக்களில் புத்தக வாசிப்பு வசதி, வடசென்னையில் பேட்மிண்டன் கோர்ட், புதிய விளையாட்டு உபகரணங்கள் அமைத்தல் என்று ஏராளமான அறிவிப்புகள் வரவேற்பை பெற்று வருகிறது.
2025-26ஆம் நிதியாண்டுக்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் மேயர் பிரியா, பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் ரூ.5,1245.52 கோடி மதிப்பீட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ரூ.681 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட் ரூ.4,464 கோடிக்கு உருவாக்கப்பட்டிருந்தது. இதன்படி சென்னை மாநகராட்சியில் 2 இடங்களில் food court அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளுடன் சுகாதாரமான சூழ்நிலை கொண்ட உணவு விற்பனை மண்டலங்கள் முதற்கட்டமாக 2 இடங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.
அதேபோல் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக விளையாட்டுத் திடல்களை மேம்படுத்தியது அவசியமான ஒன்றாகும். அதற்காக மாநகராட்சிக்கு உட்பட 150 விளையாட்டுத் திடல்களில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முக்கியமான 171 விளையாட்டுத் திடல்களில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பாதுகாவலர்கள் பணியமர்த்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பூங்காக்களில் அதிகமாக பயன்படுத்தும் 70 பூங்காக்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஒரு பகுதியில் கூரை அமைத்து இருக்கை வசதியுடன் கூடிய புத்தக வாசிப்பு மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும், அதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வடசென்னை இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த ஆண்டார்குப்பம் மற்றும் பர்மா நகர் ஆகிய 2 இடங்களில் பேட்மிண்டன் கோர்ட் அமைக்க ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் மேம்பாலங்கள் மற்றும் ரயில்வே மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியினை உகந்த முறையில் அழகுபடுத்திட ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் போக்குவரர்த்து மேலாண்மைக்காக டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாகன நெரிசல் குறைவதோடு, கூடுதல் வருவாயும் மாநகராட்சிக்கும் கிடைக்கும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications