பாதியில் நின்ற மின்சார ரயில்.. சென்ட்ரல்-அரக்கோணம் மார்க்கத்தில் சேவை பாதிப்பு! பயணிகள் அவதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை வியாசர்பாடியில், மின்சார ரயிலையும் மின் இணைப்புக் கம்பியையும் இணைக்கக்கூடிய க்ளிப் உடைந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் குவிந்திருக்கின்றனர்.
சமீப காலமாக ரயில்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இதனால் உயிரிழப்புகளும், பயணங்களில் தாமதங்களும் ஏற்படுகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை புறநகர் ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது.

எனவே மாலை 6.30 மணியிலிருந்து அரக்கோணம் மார்க்கத்தில் எந்த ரயிலும் இயக்கப்படாமல் இருக்கிறது. அதேபோல அரக்கோணத்திலிருந்து சென்ட்ரல் நோக்கி வந்த வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ரயில் பயணிகள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications