சென்னையில் மின்சார ரயிலில் செல்வோர் கவனத்துக்கு.. இன்று முதல் 5 நாட்கள் ரயில்சேவைகள் மாற்றம்
சென்னை: சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் ரயில்வே தண்டாவளத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று முதல் 5 நாட்களுக்கு அதாவது நவம்பா் 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரயில்கள் கடற்கரை-தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு ரயில்கள்
அதேபோல் மறுமார்க்கமாக செங்கல்பட்டு-சென்னை கடற்கரை: இரவு 10.15, 11.10 மணிக்குச் செல்லும் ரயில்கள் செங்கல்பட்டிலிருந்து இயங்காது என்றும் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு கடற்கரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை ரயில்கள்
இதேபோல் சென்னை கடற்கரையில் செங்கல்பட்டுக்கு அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.50, காலை 6.05, 6.43 மாலை 5.18, இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதிகாலை ரயில்கள்
இதேபோல் சென்னை கடற்கரையில் செங்கல்பட்டுக்கு அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.50, காலை 6.05, 6.43 மாலை 5.18, இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரத்தில் இருந்து
இதேபோல் செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே அதிகாலை 3.55, 4.35, 4.50, காலை 6.40, 6.55, இரவு 7.25, 10.15, 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்பட்டு வந்த ரயில்கள் செங்கல்பட்டிலிருந்து இயங்காது என்றும் தாம்பரத்தில் இருந்து தான் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 8.40 ரயில்
இதனிடையே செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே காலை 8.40 மணிக்கு இயக்கப்படும் செமி பாஸ்ட் மின்சார ரயில் செங்கல்பட்டு -சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 நாட்கள் சேவை ரத்து
செங்கல்பட்டுக்கான இரவு மற்றும் அதிகாலை நேர ரயில் சேவைகள் ரத்து என்பது நவம்பர்11ம் தேதி இன்று தொடங்கி நவம்பர் 15ம் தேதி வரை 5நாட்கள் அமலில் இருக்கும். பாரமரிப்பு பணிமுடிந்ததும் 16ம் தேதி முதல் வழக்கமான ரயில்சேவை தொடங்கும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
கோவை போத்தனூர் -கரூர் இடையே தனி ரயில் பாதை.. காங்கேயம்,வெள்ளக்கோவில் வழியாக அமைக்க பயணிகள் கோரிக்கை -
நடுவழியில் நாகர்கோவில் வந்தே பாரத்.. மதுவில் மயங்கிய நாங்குநேரி கேட் கீப்பர்கள்.. கடைசியில் ட்விஸ்ட் -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications