44 சிகரெட்டுகளை பிடிப்பதற்கு இணையாக அதிகரித்த காற்று மாசு! சென்னை மக்களே உஷார்!
சென்னை: பழையன கழிதலும், புதிய புகுதலும்தான் போகியின் தத்துவம். பழையன கழிய வேண்டும் என்பதற்காக, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை போட்டு எரித்ததால், சென்னையில் தற்போது கடும் புகை மூட்டம் ஏற்பட்டிருக்கிறது. சென்னையில் காற்று மாசு 952 என்கிற அளவில் அதிகரித்துள்ளது. இது 44 சிகரெட்டுகளை பிடிப்பதற்கு இணையாக காற்று மாசு என சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சுவாச பிரச்சனை உள்ளவர்கள், முதியவர்கள், குழந்தைகள் புகை மூட்டம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

காற்று மாசு
வழக்கமாக தீபாவளி அன்றுதான் இப்படியான புகை மூட்டம் உருவாகியிருக்கும். ஆனால், போகி திருநாளான இன்றும் இதேபோன்ற புகைமூட்டம் ஏற்பட்டிருக்கிறது. புகையில்லா போகியை கொண்டாட வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், புகை மூட்டம் ஏற்பட்டிருப்பது சூழலியல் ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் காற்று மாசு எப்படி இருக்கிறது?
பொதுவாக காற்று மாசு AQI எனப்படும் அளவீடுகளால் அளக்கப்படுகிறது. சென்னை முழுவதும், 15 இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், காற்று மாசு அளவிடும் கருவிகளை பொருத்தியிருக்கிறது. இந்த கருவிகள் காற்றில் உள்ள தூசி மற்றும் PM2.5, PM10, NO2, SO2 போன்ற நச்சு வாயுக்கள் போன்றவற்றை அளவீடு செய்கிறது. இதன் அளவீடுகள் விரைவில் வெளியாகும்.
எச்சரிக்கை மக்களே
முன்னதாக சில தனியார் காற்று மாசு அளவீடு கருவிகள், சென்னையில் 952 வரை காற்று மாசு பதிவாகியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. காற்று மாசுபாட்டை பொறுத்தவரை,
0-50 நல்லது
51-100 திருப்திகரமானது
101-200 மிதமானது
201-300 மோசமானது
301-400 மிக மோசமானது
401-500 கடுமையானது
யாருக்கு பாதிப்பு?
என வரையறுக்கப்பட்டு இருக்கிறது. இதில் 0-50 என்கிற நிலையில் காற்று மாசு இருந்தால், பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது. 51-100 என்கிற அளவில் காற்று மாசு இருந்தால் சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு லேசான பாதிப்புகள் ஏற்படலாம். 101-200 எனில், நுரையீரல் பாதிப்பு, இதய பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். 201-300 இந்த அளவுக்கு காற்று மாசு இருந்தால், எந்த பிரச்சனையும் இல்லாதவர்களாக இருந்தாலும் நீண்ட நேரம் வெளியில் இருந்தால் மூச்சு திணறல் ஏற்படும்.
கடும் எச்சரிக்கை
301-400 இந்த அளவுக்கு காற்று மாசு இருக்கிறது எனில், கடுமையான சுவாச நோய்கள் உண்டாகும். நீண்ட கால ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். 401-500 இந்த நிலை என்பது, ஆரோக்கியமானவர்களையும் பாதிக்கும். இந்த நிலையில் காற்று மாசு இருக்கிறது எனில், கடும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
44 சிகரெட்டுகள்
சிம்பிளாக சொல்வதெனில், காற்று மாசு 200க்கு மேல் சென்றால் வெளியில் சென்று உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். அதுவே 300க்கு மேல் மாசு அதிகரித்தால், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அப்படியெனில் 952 என்கிற அளவில் காற்று மாசு இருக்கிறது எனில், இந்த நிலை மிகவும் ஆபத்தானதாகும். இந்த அளவு மாசுபட்ட காற்றை நீங்கள் 24 மணி நேரமும் சுவாசிக்கிறீர்கள் எனில், 40-44 சிகரெட்டுகளை பிடிப்பதற்கு சமமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications