சென்னையில் “பயங்கரம்”.. காதலியை ரயிலில் தள்ளிவிட்ட காதலன்! கல்லூரி மாணவியின் தலை துண்டான கொடூரம்
சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை சக மாணவர் ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (20). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்து இருக்கிறார். இந்த நிலையில் இவரும் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் (23) என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் இன்று வழக்கம்போல் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்து உள்ளனர். அப்போது இருவருக்கும் திடீரென சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. கோபத்தின் உச்சிக்கு சென்ற சதீஷ் (23) ரயில் முன்பு சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார்.
அந்த சமயத்தில் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயிலில் மோதிய சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ரயில் நிலையத்தில் காத்திருந்த ரயில் பயணிகள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவியை ரயில்முன் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷ் அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சதீஷை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications