முதல்வர் விஜய் உட்பட 22 MLAகளுக்கு போன அழைப்பு.. 3 மாதங்களுக்கு பின் கூடிய சென்னை மாநகராட்சி கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த மூன்று மாதங்களாக நடைபெறாமல் இருந்த சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள பிரதான கூட்ட அரங்கில் கூடியது. சென்னை நகரின் உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படுகிறது. அப்போது ஒரு கட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கியது. ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நேற்றைய தினம் அது நிறைவடைந்தது. திங்கள்கிழமை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உள்ளிட்டோர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றி இருந்தனர்.

Chennai Corporation Mayor Priya Chennai Corporation Council Meeting

சட்டசபை

அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் முதல்வர் விஜய், தனது பதிலுரையை ஆற்றினார். சட்டசபை விவாதங்கள் காரசாரமாக நடந்தது. நேற்றோடு சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே இன்றைய தினம் சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் கூடியது.

இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மேயர் பிரியா மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அதன் பிறகு சட்டசபைத் தேர்தல் நடந்து, மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இப்போது மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மீண்டும் கூடியது.

எம்எல்ஏக்களுக்கு அழைப்பு

வழக்கமாக நடக்கும் கூட்டங்களைப் போலல்லாமல், இந்த முறை சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்க அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி சென்னைக்கு உட்பட்ட முதல்வர் விஜய் உட்பட 22 எம்.எல்.ஏ-க்களும் இந்த மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் எவ்வித சிரமமுமின்றி அமர்வதற்காக மாமன்றக் கூட்ட அரங்கில் பிரத்தியேகமாகத் தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள், சாலைச் சீரமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற மிக முக்கியமான திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டன.

காங்கிரஸ்

மேலும், இதற்கு முன்பு மாமன்றம் கூடிய போது திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி இருந்தது. ஆனால், இப்போது திமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ள காங்கிரஸ், தவெக உடன் கை கோர்த்துள்ளது. முன்பு சென்னை மாமன்றத்தில் திமுக உறுப்பினர்களுக்கு அருகே காங்கிரஸ் கட்சியினர் அமர்ந்திருந்த நிலையில், கூட்டணி மாற்றத்தை தொடர்ந்து எதிரில் அமர முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மோதல்

அப்போது ஒரு கட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது சென்னையில் தண்ணீர் லாரி சிக்கல் தொடர்பாக அதிமுக உறுப்பினர் சதீஷ்குமார் பேசிக் கொண்டு இருந்தார். அதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். இனால் இரு தரப்பிற்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்தது. மேயர் பிரியா அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்ட போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் இரு தரப்பும் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+