சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் தலையீடு.. பெண் கவுன்சிலர் கணவர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கம்
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி 113-வது வார்டு கவுன்சிலராக பொறுப்பு வகிக்கும் பிரேமா என்பவர் கடந்த ஆண்டு மழை காலத்தின்போது வடிகால்வாய்கள் புதுப்பிக்காததே மழைநீர் தேங்குவதற்கு காரணம் என்ற கூறிய காரணத்தால், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் கவுன்சிலர் பிரேமாவின் கணவரான நுங்கை எஸ்.சுரேஷை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக, திமுக பொதுச்செயலாளர் துறைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னையில் மழையால் ஏற்படும் வெள்ளம் மற்றும் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி ஒவ்வொரு ஆண்டும் சவாலாக இருந்து வருகிறது. அரசும் அதற்கு மாற்றுத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர்வடிகால் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் மழை காலத்தில் மழையால் தண்ணீர் தேங்கி சில பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் சரியாக முடிக்கப்படாததே தண்ணீர் தேங்க காரணம் என்றும், 113வது வார்டு பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் அமைப்புகள் புதுப்பிக்கப்படாமல் பழைய வடிகாலாகவே இருப்பதாகவும் இதனால், மழைநீரை வெளியேற்ற முடியவில்லை என்றும் சென்னை மாநகராட்சி 113-வது வார்டு கவுன்சிலராக உள்ள திமுகவைச் சேர்ந்த கவுன்சிலரான பிரேமா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குற்றம் சாட்டினார். ஆளும் கட்சி கவுன்சிலரான பிரேமா தெரிவித்த கருத்துகள் கட்சித் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியாக கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை மேற்கு மாவட்டத்தின் 113-வது வார்டு கவுன்சிலர் பிரேமா சுரேஷ், திமுக கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகவும் கூறி, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தற்காலிமாக நீக்கி கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டிருந்தார்.
தி.மு.க.வில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தாலும் அவருடைய கணவர் நுங்கை சுரேஷ் தொடர்ந்து தி.மு.க.வில் இருந்து வந்தார். ஆனால் அவர், மனைவி பிரேமாவின் கவுன்சிலர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு மாநகராட்சி நிர்வாகத்தில் தலையிட்டு வருவதாக புகார்கள் வந்ததாம். இதையடுத்து நுங்கை எஸ்.சுரேசும் தி.மு.க.வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பில் கூறுகையில், "சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதி 113-வது வட்டத்தை சேர்ந்த நுங்கை எஸ்.சுரேஷ் கட்சி கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்துள்ளார். எனவே அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.' என்று கூறப்பட்டுள்ளது.
பெண் கவுன்சிலர்கள் நடவடிக்கைகளில் கணவர்களின் தலையீடு இருக்க கூடாது என்று முதல்வர்.க.ஸ்டாலின் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. துரைமுருகன் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், 'தியாகராயநகர் கிழக்கு பகுதி 135-வது வட்ட செயலாளர் எம்.எஸ்.பழனிக்கு பதிலாக அசோக் நகர் 11-வது அவென்யூவை சேர்ந்த ஆர்.லோகு என்ற லோகநாதன் வட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார்" இவ்வாறு துரைமுருகன் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.
-
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
29 சீட் டீல் ஓகே? சென்னை வரும் டெல்லி விஐபி.. புஸ்ஸான தவெக பிளான்.. ஜெட் வேகத்தில் திமுக -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள் -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
மார்ச் 23.. 6 சீட்டுக்கு 1 குறைஞ்சா கூட மீண்டும் அழைக்காதீங்க.. திமுகவுக்கு கெடு விதித்த சிபிஎம்! -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு












Click it and Unblock the Notifications