Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதவியேற்ற சென்னை பாஜக கவுன்சிலர் "கோட்ஸே புகழ்" உமா ஆனந்தன்! உறுதிமொழி ஏற்பில் நடந்த சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த 22-ந் தேதி வெளியாகின. இந்த தேர்தலில் மொத்தம் 12,838 வார்டு கவுன்சிலர்கள் வெற்றிபெற்றனர்.

இதையடுத்து, வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று காலை பதவி ஏற்றனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் செய்யப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி

தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சி சென்னை தான். இங்கு மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை ரிப்பன் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டனர். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

வெற்றி

வெற்றி

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் திமுக 153 வார்டிலும், அதிமுக 15 வார்டிலும் வெற்றி பெற்றது. அதேபோல் காங்கிரஸ் 13 வார்டிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை கட்சி தலா 4 வார்டிலும், மதிமுக. 2 வார்டிலும், இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பாஜக, அமமுக தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஐந்து வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

பதவியேற்பு

பதவியேற்பு

இந்நிலையில், அனைத்து கவுன்சிலர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். திமுக-வினர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி சொல்லி பதவி ஏற்றுக் கொண்டனர். மதிமுக கவுன்சிலர் வைகோவுக்கு நன்றி சொல்லியும், விடுதலை சிறுத்தைகள் கவுன்சிலர்கள் அம்பேத்கர் மற்றும் பெரியாருக்கு நன்றி சொல்லியும் பதவி ஏற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார்.

உமா ஆனந்தன்

உமா ஆனந்தன்

சென்னை மாநகராட்சியில் பாஜக சார்பில்ல் வார்டு எண் 134ல் போட்டியிட்ட உமா ஆனந்தன் கிட்டத்தட்ட 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கோட்சே குறித்து சர்ச்சையான கருத்துகள் கூறியவர் உமா ஆனந்தன். தன்னை கோட்சேவின் மாணவர் என்றும் அழைத்தவர். இவரும் இன்று கவுன்சிலராக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது, ''தெய்வ அனுக்கிரகத்தால் வெற்றிபெற்றேன். நான் நித்தம் வணங்கும் தில்லை அம்பலதானுக்கும், அரங்கனுக்கும் கோடி நமஸ்காரம்" என்று சொல்லி பதவியேற்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+