இதெல்லாம் வேற லெவல் பிளான்..! கிண்டி ரேஸ் கிளப்பில் 4 புதிய குளங்கள்.. சென்னை மாநகராட்சி சபாஷ்
சென்னை: சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் 4 புதிய குளங்கள் தோண்டுவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மேலும் அதற்கான பணிகளும் பள்ளங்கள் தோண்டும் பணியும் தொடங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஏற்கனவே 3 குளங்கள் உள்ள நிலையில் தற்போது அமைக்கப்படும் புதிய குளங்களால் 100 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் ரேஸ் கிளப் உள்ளது. 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குதிரை பந்தயம் நடத்த ஏதுவாக 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் கடந்த 1945 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த குத்தகை காலம் வரும் 2044 ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை உள்ளது.

இந்த நிலையில் தான், ரூ. 730 கோடியே 86 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தும்படி ரேஸ் கோர்சுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வாடகை பாக்கியை செலுத்தத் தவறினால் ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்தை வெளியேற்றி, நிலத்தை சுவாதீனம் எடுக்கலாம், அந்த நிலத்தை அரசு பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரேஸ் கிளப்புக்கான குத்தகையை ரத்து செய்து தமிழக அரசு, ரேஸ் கிளப்புக்கு சீல் வைத்தது. 1970 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்கு வாடகை பாக்கித் தொகையாக ரூ.730 கோடியை செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகையும் ரேஸ் கிளப்பில் வைக்கப்பட்டது.
இந்த ரேஸ் கிளப்பில் ரூ.4,832 கோடி மதிப்பிலான 118 ஏக்கர் நிலத்தை தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறைக்கு நிலமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சென்னையில் மிகப்பெரிய அளவிலான பசுமைப் பூங்காவை உருவாக்க உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ரேஸ் கிளப்பில் ஏற்கனவே மூன்று குளங்கள் உள்ள நிலையில், புதிதாக 4 குளங்களை வெட்டும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
தற்போது உள்ள 3 குளங்களில் 30 மில்லியன் லிட்டர் வரை தண்ணீரை சேமிக்க முடியும். புதிய குளங்கள் அமைக்கப்படுவதன் மூலமாக 100 மில்லியன் லிட்டர் வரை தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளங்களை வெட்டும் பணி தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பருவமழைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தற்போது முழு வீச்சில் குளங்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications