Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் முதல்முறை.. மேம்பால வடிவமைப்பில் மாநகராட்சி சூப்பர் திட்டம்.. அதுவும் திநகரில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திநகர் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் 1-வது மெயின் ரோடு இடையே ரூ.131 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணியில் முதன்முறையாக இரும்பை பயன்படுத்தி உள்ளது சென்னை மாநகராட்சி.

சென்னை மாநகரை மேம்பால நகரம் என்று அழைக்கலாம். ஆனாலும் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு எத்தனை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டாலும் போதவில்லை. சென்னையில் பல்வேறு இடங்களில் மேம்பாலம் அமைத்தால் தான் போக்குவரத்து நெரிசல் குறையும் என்கிற அளவிற்கு நிலைமை உள்ளது. சில இடங்களில் கத்திபாரா போல் மேம்பாலங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் துரதிஷ்டவசமாக அவ்வளவு பெரிய இடம் இல்லை.

Chennai Corporation is using steel for the first time in the construction of a new flyover

சென்னையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மேம்பாலம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த மேம்பாலத்தை அப்படியே தாம்பரம் பெருங்களத்தூர் வரை ஆங்காங்கே ஏறும் அல்லது இறங்கும் இடங்களை மட்டும் அமைத்து முழுமையாக பஸ் மேம்பாலம் அமைத்தால் தான் இப்போது உள்ள போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். இப்படி சொல்லக் காரணம் அந்த அளவிற்கு தாம்பரம் முதல் கிண்டி வரை வாகன நெருக்கடி அதிகரித்துவிட்டது.

சரி விஷயத்திற்கு வருவோம். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு பல்வேறு புதிய மேம்பாலங்கள் அமைத்து வருகிறது. எங்கெல்லாம் மேம்பாலம் தேவை என்பதை ஆய்வு செய்து சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், நெடுஞ்சாலைத் துறை, மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளிட்டவை பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னை மாநகராட்சி தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் 1-வது மெயின் ரோடு இடையே ரூ.131 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கி இருக்கிறது. இந்த பாலம் ஏற்கனவே உள்ள பழைய பாலத்தின் உள்ள சாய்தளத்தை தகர்த்து புதிய பாலத்துடன் இணைக்கப்பட உள்ளது.

தற்போது திநகர் உஸ்மான் சாலையில் உள்ள மேம்பாலம் 747 மீ நீளம் கொண்டது. இந்நிலையில், இந்த மேம்பாலத்தின் சாய்தளத்தை தகர்த்து புதிதாக மேம்பாலம் 1200 மீ அளவில் அமைக்கப்பட உள்ளது.

தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து பர்கிட் சாலை மற்றும் மேட்லி சுரங்கப்பாதை சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து தென்மேற்கு போக் சாலை மற்றும் புதிய போக் சாலை சந்திப்பு, சிஐடி நகர் முதல் மெயின் சாலை மற்றும் சிஐடி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகிய 3 சந்திப்புகளையும் இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பாலம் அமைத்தால் தி நகரில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறையும்.

புதிய மேம்பாலம் 1200 மீ நீளத்தில், 8.40 மீ அகலத்தில் ரூ.131 கோடி செலவில் அமைக்கும் பணிக்கு கட்டுமான பணிகளில் புதிய முறையை சென்னை மாநகராட்சி பயன்படுத்தி இருக்கிறது. இதில், பாலத்துக்கான தூண்களை இரும்பை கொண்டு அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

Chennai Corporation is using steel for the first time in the construction of a new flyover

பொதுவாக தற்போது வரை சென்னையில் அமைக்கப்பட்டு வரும் பாலங்கள் அனைத்தும் சிமென்ட் கான்கிரீட் கொண்டு தான் அமைக்கப்படும். ஆனால் முதல் முறையாக பாலங்களுக்கான தூண்கள் இரும்பு கொண்டு அமைகப்படுகிறது. தரைக்கு உள்ளே அமைக்கப்படும் தூணின் அடிப்பகுதி சிமென்ட் கான்கிரீட் கொண்டு அமைக்கப்பட்டாலும் தூண் மற்றும் பாலத்தை தாங்கி பிடிக்கும் பகுதி இரும்பால் தான் அமைக்கப்படுமாம்.

சேலம் இரும்பு ஆலை இந்த தூண் போன்ற வடிவமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த இணைப்பு முடிந்த உடன் பாலத்தின் மேல் பகுதி அமைக்கும் பணி நடைபெறும். பாலத்தின் மேல் பகுதி வழக்கம் போல் சிமென்ட் கான்கிரீட் கொண்டு அமைக்கப்படும். சென்னையில் இரும்பு தூணால் அமைக்கப்படும் முதல் மேம்பாலம் இதுதான் என்கிறார்கள் அதிகாரிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+