பிரச்சனைன்னு வந்தால் மட்டும் அதிகாரிகளுக்கு நாங்க வேணும்! மேயர் பிரியாவிடம் கவுன்சிலர்கள் ஆதங்கம்!
சென்னை: வார்டுகளில் ஏதேனும் பிரச்சனை என்றால் மட்டும் அதிகாரிகள் தங்களை தேடுவதாகவும் மற்ற நேரங்களில் கண்டுகொள்வதே கிடையாது எனவும் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், மேயர் ப்ரியா ராஜனிடம் தங்கள் ஆதங்கத்தை கொட்டினர்.
இதையடுத்து வார்டுகளில் எந்தப் பணிகள் நடந்தாலும் கவுன்சிலர்களுக்கு தகவல் சொல்ல வேண்டும் என்றும் அதற்குரிய உரிமை கவுன்சிலர்களுக்கு உள்ளது எனவும் அதிகாரிகளுக்கு அட்வைஸ் அளித்தார் ப்ரியா ராஜன்.

தமிழகம் முழுவதும் மேயர் கவுன்சிலர்கள் இடையேயான பிரச்சனைக்கு காரணமே கவுன்சிலர்கள் சொல்லும் குறைகளை மேயர்கள் காது கொடுத்துக் கேட்பதில்லை என்பது தான். ஆனால் சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை அதில் விதி விலக்கு. கவுன்சிலர்கள் குறைகளை சொன்னால் உடனுக்குடன் அதனை நிவர்த்தி செய்து தனது பெயரை டேமேஜ் ஆகாமல் கவனித்துக்கொள்கிறார் மேயர் ப்ரியா ராஜன்.
அந்த வகையில் சென்னை மாமன்றக் கூட்டத்தில், அதிகாரிகள் மீது ஏகத்துக்கும் கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து ஆன் தி ஸ்பாட்டிலேயே சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுடன் இது குறித்து பேசி, கவுன்சிலர்களுக்கு தகவல் சொல்வதில் அதிகாரிகளுக்கு என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து இனிமேல் வார்டுகளில் எந்தப் பணிகள் நடந்தாலும் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்ற உறுதியை அளித்தார். இதேபோல் ஒவ்வொரு மாநகராட்சியிலும் கவுன்சிலர்களுக்கு உரிய முறையில் மேயர்கள் ரெஸ்பான்ஸ் கொடுத்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும். அதைவிடுத்து கோஷ்டிக் கொடியை கையில் பிடித்துக் கொண்டு நின்றால் பிரச்சனையும் தீராது சர்ச்சையும் ஓயாது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications