பிரச்சனைன்னு வந்தால் மட்டும் அதிகாரிகளுக்கு நாங்க வேணும்! மேயர் பிரியாவிடம் கவுன்சிலர்கள் ஆதங்கம்!
சென்னை: வார்டுகளில் ஏதேனும் பிரச்சனை என்றால் மட்டும் அதிகாரிகள் தங்களை தேடுவதாகவும் மற்ற நேரங்களில் கண்டுகொள்வதே கிடையாது எனவும் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், மேயர் ப்ரியா ராஜனிடம் தங்கள் ஆதங்கத்தை கொட்டினர்.
இதையடுத்து வார்டுகளில் எந்தப் பணிகள் நடந்தாலும் கவுன்சிலர்களுக்கு தகவல் சொல்ல வேண்டும் என்றும் அதற்குரிய உரிமை கவுன்சிலர்களுக்கு உள்ளது எனவும் அதிகாரிகளுக்கு அட்வைஸ் அளித்தார் ப்ரியா ராஜன்.

தமிழகம் முழுவதும் மேயர் கவுன்சிலர்கள் இடையேயான பிரச்சனைக்கு காரணமே கவுன்சிலர்கள் சொல்லும் குறைகளை மேயர்கள் காது கொடுத்துக் கேட்பதில்லை என்பது தான். ஆனால் சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை அதில் விதி விலக்கு. கவுன்சிலர்கள் குறைகளை சொன்னால் உடனுக்குடன் அதனை நிவர்த்தி செய்து தனது பெயரை டேமேஜ் ஆகாமல் கவனித்துக்கொள்கிறார் மேயர் ப்ரியா ராஜன்.
அந்த வகையில் சென்னை மாமன்றக் கூட்டத்தில், அதிகாரிகள் மீது ஏகத்துக்கும் கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து ஆன் தி ஸ்பாட்டிலேயே சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுடன் இது குறித்து பேசி, கவுன்சிலர்களுக்கு தகவல் சொல்வதில் அதிகாரிகளுக்கு என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து இனிமேல் வார்டுகளில் எந்தப் பணிகள் நடந்தாலும் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்ற உறுதியை அளித்தார். இதேபோல் ஒவ்வொரு மாநகராட்சியிலும் கவுன்சிலர்களுக்கு உரிய முறையில் மேயர்கள் ரெஸ்பான்ஸ் கொடுத்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும். அதைவிடுத்து கோஷ்டிக் கொடியை கையில் பிடித்துக் கொண்டு நின்றால் பிரச்சனையும் தீராது சர்ச்சையும் ஓயாது.












Click it and Unblock the Notifications