Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

300 டன் தீபாவளி குப்பை.. சென்னையில் பரிதாப நிலை.. இரவு முழுக்க விடாமல்.. கூட்டிய தூய்மை பணியாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பிறகு, சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரவு முழுவதும் இடைவிடாமல் பட்டாசு கழிவுகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.

பொதுவாக, தீபாவளி என்றாலே குதூகலம்தான். அதிகாலையில் எண்ணெய் குளியல், புது ஆடைகள் அணிந்து பட்டாசு வெடித்தல், பலவித இனிப்புகள், இட்லி மட்டன் குழம்பு என அனைத்தும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Diwali deepavali

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்

அதே சமயம் பொங்கல், பூஜை போல இல்லாமல் தீபாவளி பண்டிகைக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் காற்று மாசு மற்றும் குப்பைதான். தீபாவளியில் வெடி வெடிப்பதால் அதிக அளவு புகை ஏற்பட்டு காற்று மாசு ஏற்படும். அதேபோல் கடுமையான சத்தம் காரணமாக ஒலி மாசு ஏற்பட்டு பொதுமக்கள், வயதானவர்கள், விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும்.

இவை அனைத்தையும் கடந்து, மிக அதிக அளவில் சேரும் குப்பைகளால் சாலைகள் மோசமான காட்சியை அளிக்கும். அதன்படி, நேற்று சென்னையில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

தூய்மைப் பணியாளர்கள் இரவு முழுக்க பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை தொடங்கிய இந்த சுத்திகரிப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பல இடங்களில் குவிந்திருக்கும் குப்பைகளை கையால் அள்ளி வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்துகின்றனர்.

குப்பைகளை அகற்றும் பணிகள்

பட்டாசு காகிதங்கள் தெருக்களை நிறைத்து, சாலைகளை குப்பைக் கடலாக மாற்றியுள்ளன. இவற்றை அகற்றும் பணிகள் தொடர்கின்றன. மாநகராட்சி கணக்குப்படி, மொத்தம் 300 டன் குப்பைகள் சேர்ந்துள்ளன. நேற்று சென்னையில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

நேற்று இரவு வரை சுமார் 100 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இன்று இரவுக்குள் அனைத்து கழிவுகளையும் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், 200 டன் வரை பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சென்னை மாநகராட்சி மதிப்பிட்டுள்ளது. இதற்காக மட்டும் 19,600 தூய்மைப் பணியாளர்கள் இரவு முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிகரிக்கிறது. இந்த ஆண்டும் அதேபோல் காற்று மாசு அதிகரித்துள்ளது. முக்கியமாக, சென்னை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் காற்று மாசு இன்று மோசமான நிலையை எட்டியுள்ளது.

காற்றின் தரக்குறியீடு

சென்னையில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக்குறியீடு (AQI) 250-க்கு மேல் பதிவாகியுள்ளது. இது மிக மோசமான நிலை. நீண்ட காலத்திற்கு இந்த காற்றை சுவாசிப்பது மக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

வேளச்சேரியில் காற்றின் தரக்குறியீடு 301-ஐ எட்டியுள்ளது, இது "மிகவும் ஆரோக்கியமற்ற" நிலையாகும். நீண்ட காலம் இந்த காற்றை சுவாசித்தால் சுவாச நோய்கள் ஏற்படலாம். பெருங்குடியில் 231 மற்றும் செங்கல்பட்டில் 242 ஆகப் பதிவாகியுள்ளது, இவையும் ஆரோக்கியமற்ற நிலைகளே. நுரையீரல் கோளாறுகள் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படலாம். புதுச்சேரியில் 243, மதுரையில் 132 ஆகப் பதிவாகியுள்ளது. பாட்னா (405), நொய்டா (402), டெல்லி (359), கொல்கத்தா (355) ஆகியவை மற்ற முக்கிய நகரங்களின் தற்போதைய காற்று மாசு அளவுகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+