300 டன் தீபாவளி குப்பை.. சென்னையில் பரிதாப நிலை.. இரவு முழுக்க விடாமல்.. கூட்டிய தூய்மை பணியாளர்கள்
சென்னை: தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பிறகு, சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரவு முழுவதும் இடைவிடாமல் பட்டாசு கழிவுகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.
பொதுவாக, தீபாவளி என்றாலே குதூகலம்தான். அதிகாலையில் எண்ணெய் குளியல், புது ஆடைகள் அணிந்து பட்டாசு வெடித்தல், பலவித இனிப்புகள், இட்லி மட்டன் குழம்பு என அனைத்தும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்
அதே சமயம் பொங்கல், பூஜை போல இல்லாமல் தீபாவளி பண்டிகைக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் காற்று மாசு மற்றும் குப்பைதான். தீபாவளியில் வெடி வெடிப்பதால் அதிக அளவு புகை ஏற்பட்டு காற்று மாசு ஏற்படும். அதேபோல் கடுமையான சத்தம் காரணமாக ஒலி மாசு ஏற்பட்டு பொதுமக்கள், வயதானவர்கள், விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும்.
இவை அனைத்தையும் கடந்து, மிக அதிக அளவில் சேரும் குப்பைகளால் சாலைகள் மோசமான காட்சியை அளிக்கும். அதன்படி, நேற்று சென்னையில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தூய்மைப் பணியாளர்கள் இரவு முழுக்க பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை தொடங்கிய இந்த சுத்திகரிப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பல இடங்களில் குவிந்திருக்கும் குப்பைகளை கையால் அள்ளி வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்துகின்றனர்.
குப்பைகளை அகற்றும் பணிகள்
பட்டாசு காகிதங்கள் தெருக்களை நிறைத்து, சாலைகளை குப்பைக் கடலாக மாற்றியுள்ளன. இவற்றை அகற்றும் பணிகள் தொடர்கின்றன. மாநகராட்சி கணக்குப்படி, மொத்தம் 300 டன் குப்பைகள் சேர்ந்துள்ளன. நேற்று சென்னையில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
நேற்று இரவு வரை சுமார் 100 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இன்று இரவுக்குள் அனைத்து கழிவுகளையும் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், 200 டன் வரை பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சென்னை மாநகராட்சி மதிப்பிட்டுள்ளது. இதற்காக மட்டும் 19,600 தூய்மைப் பணியாளர்கள் இரவு முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிகரிக்கிறது. இந்த ஆண்டும் அதேபோல் காற்று மாசு அதிகரித்துள்ளது. முக்கியமாக, சென்னை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் காற்று மாசு இன்று மோசமான நிலையை எட்டியுள்ளது.
காற்றின் தரக்குறியீடு
சென்னையில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக்குறியீடு (AQI) 250-க்கு மேல் பதிவாகியுள்ளது. இது மிக மோசமான நிலை. நீண்ட காலத்திற்கு இந்த காற்றை சுவாசிப்பது மக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
வேளச்சேரியில் காற்றின் தரக்குறியீடு 301-ஐ எட்டியுள்ளது, இது "மிகவும் ஆரோக்கியமற்ற" நிலையாகும். நீண்ட காலம் இந்த காற்றை சுவாசித்தால் சுவாச நோய்கள் ஏற்படலாம். பெருங்குடியில் 231 மற்றும் செங்கல்பட்டில் 242 ஆகப் பதிவாகியுள்ளது, இவையும் ஆரோக்கியமற்ற நிலைகளே. நுரையீரல் கோளாறுகள் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படலாம். புதுச்சேரியில் 243, மதுரையில் 132 ஆகப் பதிவாகியுள்ளது. பாட்னா (405), நொய்டா (402), டெல்லி (359), கொல்கத்தா (355) ஆகியவை மற்ற முக்கிய நகரங்களின் தற்போதைய காற்று மாசு அளவுகள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications