சென்னையில் சொந்த வீடு வைத்துள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்பு.. குடிநீர் வடிகால் வாரியம் முக்கிய அறிவிப்பு

சென்னையில் சொந்த வீடு வைத்துள்ளவர்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சொந்த வீடு வைத்துள்ளவர்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி சென்னைக் குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை (11.03.2023) அன்று சென்னையின் அனைத்து மண்டல குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கெண்டு குடிநீர், கழிவு நீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குடிநீர் கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரம் 426 சதுர கி.மீ. பரப்புகொண்டதாகும். இந்த நகரம் நிர்வாக வசதிகளுக்காக 15 மண்டலங்களாகவும், 200 வார்டுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் குடிநீர் வழங்கும் சேவை, கழிவுநீர் அகற்றும் சேவையை சென்னை குடிநீர்வாரியம் மேற்கொண்டு வருகிறது. மாநகரில் மொத்தம் 12 லட்சத்து 68 ஆயிரத்து 132 சொத்து உரிமையாளர்கள் இருக்கிறார்கள். இவர்களிடமிருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவைக்கான வரி வசூலிக்கப்படுகிறது. இவர்கள் நாளை சென்னை குடிநீர் வடிகால் வாரிய கூட்டத்தில் கலந்து கொண்டு சந்தேகங்களை தீர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை கூட்டம்

நாளை கூட்டம்

சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில், குறை தீர்க்கும் கூட்டங்கள் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான குறை தீர்க்கும் கூட்டம் 11.03.2023 (சனிக்கிழமை ) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும்.

முக்கியமான கூட்டம்

முக்கியமான கூட்டம்

திருவெற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளரசவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 15 மண்டல அலுவங்களில் குடிநீர் வாரிய அலுவலகங்களில் நாளை கூட்டம் நடைபெற உள்ளது.

குடிநீர் இணைப்பு

குடிநீர் இணைப்பு

இந்த குறை தீர்க்கும் கூட்டங்கள் வாயிலாக பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். எனவே இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவு நீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளங்கங்களையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்" இவ்வாறு சென்னை குடிநீர்வாரியம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.

உரிமையாளர்கள்

உரிமையாளர்கள்

புலம்பும் வீட்டு உரிமையாளர்கள்.. என்ன பிரச்சனை.. சென்னையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவைக்கான வரி வசூலிக்கப்படுகிறது. ஒவ்வோர் அரையாண்டும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் வரி செலுத்த வேண்டும். 15-ம் தேதிக்கு மேல் செலுத்தாவிட்டால், அந்த தொகைக்கு மேல் வரி விதிக்கப்படுகிறது. நீண்டகாலம் வரி செலுத்தாத சொத்து உரிமையாளரிடமிருந்து, பொருட்களை ஜப்தி செய்வார்கள். அந்த வகையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி பாக்கி வைத்துள்ள வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. தற்போது வீடு வீடாக நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

ஜப்தி நோட்டீஸ்

ஜப்தி நோட்டீஸ்

இதனிடையே இதுபற்றி சென்னையில் உள்ள ஒரு வீட்டு உரிமையாளர் கூறும் போது, பலர் லட்சக்கணக்கில் வரி நிலுவை வச்சிருக்காங்க.. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சுமார் ரூ.500 நிலுவை வைத்திருப்போர் சொத்துகள் ஜப்தி செய்யப்படும் என்று நோட்டீஸ் கொடுத்திருங்காக. சென்னையில் சில இடங்களில் குழாய் பதித்தும் குடிநீர் இன்னமும் வரவில்லை இப்படியான நிலையில் 500 பாக்கி வைத்திருப்பவர்களை எல்லாம் தொந்தரவு செய்து சரியானதல்ல என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+