Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chennai Encounter: சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸாரால் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனவரி 30 ஆம் தேதி மாதவரம் ரவுண்டானா அருகே ரூ. 25 லட்சம் ரொக்கம், 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி தொப்பை கணேஷன் என்பவர் சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாதவரம் ரவுண்டான அருகே ரவுடி தொப்பை கணேஷ் என்பவரை போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர். கொள்ளை வழக்கில் கணேஷை கைது செய்ய முயன்றபோது, அவர் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பி ஓடியதால் தற்காப்பிற்காக போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Chennai rowdy encounter police

என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி தொப்பை கணேஷ் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரூ. 25 லட்சம் பணம், 15 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் கணேஷை பிடிக்கச் சென்றபோது இந்த என்கவுன்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது.

ரவுடி தொப்பை கணேஷ் ஒரு ஏ பிளஸ் சரித்திரப் பதிவு குற்றவாளியாவார். கொலை, கொள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் கணேஷ் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+