ரேஷன்தாரர்களுக்கு ரூ.6000 நிவாரணம்.. சென்னை வீதிகளில் காலையிலேயே கூட்டம்.. பெருங்களத்தூரில் பரபர
சென்னை: நாளை முதல் நிவாரண நிதி வழங்கப்படுவதால் இன்று அதிகாலையிலேயே சென்னை வீதிகளில் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.. அத்துடன், போலீஸ் பாதுகாப்புடன் டோக்கன்கள் தரப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தலா ரூ.6 ஆயிரம் நிவாரணம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
4 மாவட்டங்கள்: இந்த 4 மாவட்டங்களில் சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள், வருமானவரிசெலுத்துவோர், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு நிவாரணம் இல்லை என்றும், இவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அதுகுறித்த விவரங்களை ரேஷன் கடைகளில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் அரசுஅறிவித்துள்ளது.

அந்தவகையில், நேற்றுகாலை முதல் டோக்கன்கள் விநியோகிக் கப்பட்டன... சென்னையை பொறுத்தவரை, 1000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.. ஒவ்வொரு கடைகள் முன்பும் பொதுமக்கள் வரிசையில் காத்து நின்றனர். இன்று 2-வது நாளாக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது..
ரேஷன் கடைகள்: ஆனால், ஒரு சில ரேஷன் கடைகளில் இன்றுதான் டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 1000 முதல் 1,500 குடும்ப அட்டைதாரர்கள் இருக்கின்றனர்.. இதில், வடசென்னை பகுதியை பொறுத்தவரை, அதிகாலை 5 மணிக்கே வரிசையில் பொதுமக்கள் நிற்க ஆரம்பித்துவிட்டனர்.. சில பெரியவர்கள், அந்தந்த வீட்டின் சார்பாக வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
தெரு முழுக்க மக்கள் நின்றநிலையில், அடுத்த தெரு வரையிலும் வரிசை சென்றது.. விடிகாலையிலேயே மக்கள் காத்திருக்க துவங்கிவிட்டாலும், 8 மணிக்குதான் ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் கொடுக்க துவங்கினர்.. ஒவ்வொரு கடைகளிலும் தினமும் 100 பேர் முதல் 300 பேர் வரை கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
சில ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.. போலீசாரும், வரிசையை ஒழுங்குப்படுத்தியவாறு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பெருங்களத்தூர்: அனைத்து இடங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்த பலர், பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறாததை அறிந்து கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இதுபோன்ற இடங்களிலும் போலீஸ் பாதுகாப்புடன் டோக்கன் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, பெருங்களத்தூர் போன்ற பகுதிகளில் டோக்கன் கிடைக்காத குடும்ப அட்டைதாரர்கள் போலீஸாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
யாருக்கு நிவாரண தொகை கிடைக்குமோ, அந்த பயனாளிக்கு மட்டும் மெசேஜ் அனுப்பினால் உதவியாக இருக்கும் என்றும், பயனாளிகளின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுக்க துவங்கி உள்ளன.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications