சென்னை சிறுமி கொலை.. உயிரிழக்கும் வரை நடந்த கொடூர தாக்குதல்.. வெளியான அதிர்ச்சி தகவல்
சென்னை: சென்னை 15 வயது சிறுமி கொலை வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமிக்கு நடந்த சித்ரவதைகள் குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை, அமைந்தகரை மேத்தாநகர் பகுதியைச் சேர்ந்த முகமது நிஷாத் - நாசியா தம்பதி. இவர்கள் வீட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டு வேலை செய்து வந்தார். அந்த சிறுமிக்கு அப்பா இல்லை. அம்மாவால் அவரை கவனித்துக் கொள்ள முடியவில்லை. குடும்பசூழல் காரணமாக சிறுமி முகமது நவாஸ் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களாக அந்த அப்பார்ட்மென்ட் பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் சர்புதின் என்பவர் அமைந்தகரை காவல்நிலையத்தில் புகாரளித்தார். விசாரணையில் சிறுமியின் உடல் அந்த வீட்டின் குளியலறையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டது. சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை தொடங்கியது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அதில் உயிரிழந்த, சிறுமி கடந்த 2023 டிசம்பர் மாதம் முதல் முகமது நிஷாத்தின் நான்கு வயது குழந்தையின் பராமரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இதுதொடர்பாக முகமது நிஷாத் மற்றும் அவரின் மனைவி நாசியா மற்றும் அவர்களின் நண்பர் லோகேஷ், அவரின் மனைவி ஜெயசக்தி, வீட்டு பணிப்பெண் மகேஸ்வரி, முகமது நிஷாத் சகோதரி சீமா பேகம் ஆகியோரிடம் காவல்துறை விசாரணை நடத்தியது.
அதில் மேற்சொன்ன அனைவரும், கடந்த சில மாதங்களாகவே சிறுமியை அடித்து துன்புறுத்தியது தெரியவந்துள்ளது. தீபாவளி நாளில் (31.10.2024) அவர்கள் சிறுமியை சித்ரவதை செய்து தாக்கியதில் அவர் உயிரிழந்ததும் தெரியவந்திருக்கிறது.
சிறுமிக்கு பல்வேறு வகையில் சித்ரவதை கொடுத்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது. அயர்ன் பாக்ஸ் மற்றும் சிகரெட்டில் சூடு வைப்பது என்று கொடுமைப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக அவருக்கு விடுப்பு கொடுக்காமல், ஊருக்கும் அனுப்பாமல் டார்ச்சர் செய்துள்ளனர். தீபாவளி தினம் சிறுமி சரியாக வேலை செய்யவில்லை என்று சொல்லி அவரை தாக்கியுள்ளனர். அப்போது சிறுமி மயக்கமடைந்துள்ளார். பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
துர்நாற்றம் வெளியில் வந்துவிடக் கூடாது என்பதற்காக வீடு முழுவதும் ஊதுபத்தியை பற்றிவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். நண்பர்கள் வீட்டில் பதுங்கியிருந்தவர்களை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தியது. ஆரம்பத்தில் அவர்கள் இதை மறுத்தனர். பிறகு ஒப்புக் கொண்டனர்.
சிறுமி தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் நினைவு இழக்கும் வரை விடாமல் கொடூரமாக தாக்கியுள்ள தகவலும்வெளியாகியுள்ளது. இதனால் சந்தேக வழக்கை. கொலை வழக்காக மாற்றி, போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளை அதில் இணைத்தனர். தொடர்ந்து முகமது நிஷாத், நாசியா, லோகேஷ், ஜெயசக்தி, மகேஸ்வரி, சீமா பேகம் ஆகிய ஆறு பேரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அவர்கள் ஆறு பேரையும் வருகிற 16 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications