முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு ஆடை விதிகளை வகுக்க ஹைகோர்ட்டில் மனு
சென்னை: முதலமைச்சர் , துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு ஆடை விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.பிரவீன் சமாதானம் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், திமுக கொடி மற்றும் சின்னம் பொறித்த டி சர்ட் அணிந்து கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறியுள்ளார்.

நடுநிலையாக செயல்பட வேண்டிய துணை முதலமைச்சர் கட்சி சின்னம் பொறித்த டி சர்ட் அணிந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கும் போது கட்சி சார்பில் வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு வகுக்கப்பட்டுள்ள நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்பற்றாதது சட்டவிரோதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டி சர்ட் அணிய இடைக்கால தடை விதிக்க வேண்டுமெனவும், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆடை விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications