Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் நீர் நிலைகளில் விபத்து, மரணத்தை தடுக்க எச்சரிக்கை பலகைகள்.. ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நீர்நிலைகளில் விபத்து, மரணங்களை தடுக்கும் வகையில், எச்சரிக்கை பலகைகள், அவசர கட்டுப்பாட்டு மையங்கள் அமைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சுற்றுலா தலங்கள், கோவில் குளங்கள், அருவிகள், கடல் பகுதிகளில் நீரில் மூழ்கி மரணங்கள் ஏற்படுவதை தடுக்க, 24 மணி நேரமும் பணியில் இருக்கும் நீச்சலில் நிபுணத்துவ வாய்ந்தவர்கள் கொண்ட குழுவை உருவாக்க வேண்டும், நீர் நிலைகளில் ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.

Chennai HC ordered Tamilnadu government to set up warning boards in water bodies

கடல் சீற்றமான பகுதிகளான சென்னை திருவொற்றியூர் முதல் கிழக்கு கடற்கரை மகாபலிபுரம் வரை தடுப்புகளை அமைக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த கோடீஸ்வரி என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். ராமேஸ்வரத்தில் புனித தீர்த்தத்தில் நீராடும்போது பக்தர்கள் இறந்ததையும் மனுவில் சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத் துறை தரப்பில், ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 18 தீர்த்த கிணறுகளுக்குள் பக்தர்கள் இறங்கி நீராட அனுமதி இல்லை எனவும், தீர்த்தத்தை தெளிப்பதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கோவில் திருவிழா காலங்களில் மீட்பு படை, கண்காணிப்பு கோபுரம் ஆகியவை மூலம் கண்காணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசும், அறநிலையத் துறையும் எடுத்த நடவடிக்கைகளை, ஆண்டு முழுவதும் பின்பற்றும் வகையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், ராமேஸ்வரத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை மற்ற கடற்கரை கோவில்களிலும் பின்பற்றி செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மீட்பு பணிக்கு கடலோர காவல்படையை பணியமர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆறு, குளம், ஏரி, கடல் போன்ற அனைத்து விதமான நீர்நிலைகளிலும் விபத்து மரணங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் எனவும், எச்சரிக்கை பலகைகள், அவசர கட்டுப்பாட்டு மையங்கள் ஆகியவற்றை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, கோடீஸ்வரி தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+