தமிழகத்தில் நீர் நிலைகளில் விபத்து, மரணத்தை தடுக்க எச்சரிக்கை பலகைகள்.. ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் நீர்நிலைகளில் விபத்து, மரணங்களை தடுக்கும் வகையில், எச்சரிக்கை பலகைகள், அவசர கட்டுப்பாட்டு மையங்கள் அமைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சுற்றுலா தலங்கள், கோவில் குளங்கள், அருவிகள், கடல் பகுதிகளில் நீரில் மூழ்கி மரணங்கள் ஏற்படுவதை தடுக்க, 24 மணி நேரமும் பணியில் இருக்கும் நீச்சலில் நிபுணத்துவ வாய்ந்தவர்கள் கொண்ட குழுவை உருவாக்க வேண்டும், நீர் நிலைகளில் ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.

கடல் சீற்றமான பகுதிகளான சென்னை திருவொற்றியூர் முதல் கிழக்கு கடற்கரை மகாபலிபுரம் வரை தடுப்புகளை அமைக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த கோடீஸ்வரி என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். ராமேஸ்வரத்தில் புனித தீர்த்தத்தில் நீராடும்போது பக்தர்கள் இறந்ததையும் மனுவில் சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத் துறை தரப்பில், ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 18 தீர்த்த கிணறுகளுக்குள் பக்தர்கள் இறங்கி நீராட அனுமதி இல்லை எனவும், தீர்த்தத்தை தெளிப்பதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கோவில் திருவிழா காலங்களில் மீட்பு படை, கண்காணிப்பு கோபுரம் ஆகியவை மூலம் கண்காணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசும், அறநிலையத் துறையும் எடுத்த நடவடிக்கைகளை, ஆண்டு முழுவதும் பின்பற்றும் வகையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், ராமேஸ்வரத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை மற்ற கடற்கரை கோவில்களிலும் பின்பற்றி செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
மீட்பு பணிக்கு கடலோர காவல்படையை பணியமர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆறு, குளம், ஏரி, கடல் போன்ற அனைத்து விதமான நீர்நிலைகளிலும் விபத்து மரணங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் எனவும், எச்சரிக்கை பலகைகள், அவசர கட்டுப்பாட்டு மையங்கள் ஆகியவற்றை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, கோடீஸ்வரி தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications