"தாமரை பூவுக்கும் பாஜகவுக்கும் என்னிக்கும்.." சின்னம் ஒதுக்கியதே தப்பு.. ஹைகோர்ட்டில் அதிரடி மனு
சென்னை: பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கப்பட்ட தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான T.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும், நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது ஆகும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

எனவே பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் தனது மனு மீது நடவடிக்கை எடுக்காத இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல் இயற்கை நீதிக்கு எதிரானது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
எனவே தனது மனுவை பரிசீலித்து, பாஜக-வுக்கு வழங்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, லஷ்மி நாராயணன் அமர்வில் முறையிடப்பட்டது. ஆனால் முறையீட்டை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications