நயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா? காவல்துறையை விளாசிய ஹைகோர்ட்!
Recommended Video
சென்னை: இளம்பெண் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரில் மெத்தனமாக இருந்த காவல்துறையை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவரின் 19 வயது மகள் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மாயமானார். இதுதொடர்பாக மகேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால் அந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதைத்தொடர்ந்து தனது மகளை கண்டு பிடித்து தர உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இன்று விசாரணை
மேலும் தனது மகளை கண்டுபிடித்து தர காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மகேஸ்வரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். மகேஸ்வரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?
அப்போது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் காவல்துறையை சரமாரியாக விளாசியது. சாதாரண மக்கள் காணாமல் போனதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

நயன்தாரா போன்ற நடிகைகள்
4 மாதத்திற்கு முன்பு அளித்த புகாரில் காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் நயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களாக என்றும் கேள்வி எழுப்பியது.

நீதிபதிகள் காட்டம்
மாத சம்பளம் வாங்கும் போலீசார் அதற்கு ஏற்ப பணி செய்ய வேண்டும். இல்லையென்றால் அதற்கான தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்றும் நீதிபதிகள் காட்டமாக கூறினர்.

வருத்தமளிக்கிறது
சாதாரண மக்கள் புகார் அளித்தால் இப்படிதான் காவல்துறையின் நடவடிக்கை இருக்குமா? என்றும் காணாமல் போன இளம்பெண்ணை மீட்க 4 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வீட்டில் யாராவது காணாமல் போனால்
உங்கள் உறவினர்களோ அல்லது உங்கள் வீட்டில் யாரேனும் காணாமல் போனால் இப்படிதான் இருப்பீர்களா? என்றும் காவல்துறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சாதராண மக்கள் காணமல் போனதாக அளிக்கப்படும் புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

17ஆம் தேதி அறிக்கை தாக்கல்
இளம் பெண் மாயமான வழக்கில் போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை ஹைகோர்ட் வரும் 17 ஆம் தேதி இளம்பெண் மாயமான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications