Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் வழக்கு.. தீர்ப்புக்கு முன்பாக அட்வகேட் ஜெனரல் சொன்ன விஷயம்.. முடிவையே மாற்றிய நீதிபதிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு சென்ற விவகாரத்தில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் 2017 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கொண்டு சென்ற அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதல்வருமான மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் மீது உரிமைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

mk stalin gutkha high court

அதன்படி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த நோட்டீஸை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக சட்டசபை செயலாளர் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், இந்த நோட்டீஸ் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தற்போதைய சட்டசபை தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்பதால் அதனை அவருடைய முடிவுக்கே விட்டுவிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சட்டசபை மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே ஒன்றோடு ஒன்று தலையீடு செய்யக்கூடாது. உரிமை மீறல் நோட்டீஸ் மீது இறுதி முடிவெடுக்கப்படாத நிலையில், அதில் தலையிட விரும்பவி்ல்லை. அவ்வாறு தலையீடு செய்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.

மேலும் அது மிகவும் ஆபத்தானது. இதுதொடர்பாக புதிதாக அமைந்துள்ள சட்டசபை முடிவுக்கே விட்டுவிடலாம் என கருத்து தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் தீர்ப்பை அளிக்க தயாரானபோது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் ஆஜராகி, இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள 18 எம்.எல்.ஏக்களில், நான்கு பேருக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மீதமுள்ள 14 பேருக்கு இதுவரை நோட்டீஸ் அனுப்பவில்லை.

எனவே இந்த வழக்கில் தற்போது நீங்கள் தீர்ப்பளித்தால், இவர்கள் மேல்முறையீடு செல்லும்போது எங்களுடைய கருத்தை கேட்காமலேயே உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது என்று ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்கள். எனவே அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி அவர்கள் கருத்தை கேட்ட பின்னர் தான் தீர்ப்பு அளிக்க வேண்டும் எனக் கோரினார்.

இதையடுத்து, ஆவணங்களை எடுத்துப் பார்த்த நீதிபதிகள், முதல்வர் ஸ்டாலின் தரப்பில் கூட தங்களுக்கு நோட்டீஸ் வரவில்லை என கூறப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பாததற்கு காரணம் அவர் அவெய்லபிளாக இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றனர்.

இதைத்தொடர்ந்து ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கும் நோட்டீஸ் அனுப்பாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "4 பேருக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நோட்டீஸ் அனுப்ப தவறிவிட்டனர்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நோட்டீஸ் வரவில்லை என கூறியதால் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அப்போதைய திமுக எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் எலக்ட்ரானிக் முறையிலோ அல்லது நேரிலோ நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+