"அரசே இப்படி செய்யலாமா! பாலை பிளாஸ்டிக்கில் விற்பது ஏன்?" சென்னை ஐகோர்ட் கூறிய முக்கிய கருத்து
சென்னை: பிளாஸ்டிக் தடை உத்தரவு குறித்து தொடரப்பட்ட வழக்கில் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டில் விற்பது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிளாட்டிக் தடை உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உறுபதியாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கியோர் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது,

தமிழக அரசு வழக்கறிஞர்
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும் ,பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதாகக் கடைகள் சீல் வைக்கப்பட்டது குறித்த அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உணவுப் பொருட்கள், தீன்பண்டல், விளையாட்டு பொம்மைகள், துணிமணிகள் பிளாஸ்டிக் பைகளில் புகுத்தி விற்கப்படுவதாகக் கூறினார்.

ரேஷன் கடைகள்
மேலும் மஞ்சள் பை திட்டம் கொண்டு வந்தாலும், ரேஷன் கடைகளில் பொருட்கள் பிளாஸ்டிக்கில் வைத்து விற்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து, பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குத் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை எடுத்து வருவதைத் தடுக்காத வரையில் அவற்றைப் பறிமுதல் செய்வதால் பெரிய அளவில் பலன் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடும் அதிருப்தி
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யப்படுவதாகக் கூறி, சில்லறை வியாபார கடைகளை மூடும் நிலையில் அரசு பிளாஸ்டிக்கில் பொருட்களை விற்பனை செய்யலாமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை பிளாஸ்டிகில் அடைத்து மஞ்சள் பையில் வழங்குவதால் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்தார்,

பால் விற்பனையில் பிளாஸ்டிக்
மேலும், அரசு நடத்தும் கடையில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் பின்னர் எப்படி தடையை அமல்படுத்த முடியும் எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பாலை ஏன் முன்பு போலப் பாட்டிலில் விற்கக்கூடாது என்றும் பால் பொருட்களுக்குத் தான் பெருமளவிற்கு பிளாஸ்டிக் பக்கெடுக்கள் பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் வரும் ஜூன் 13ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications