நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் படங்கள் மட்டுமே இருக்கலாம்.. வேறு படங்களுக்கு அனுமதி இல்லை!
சென்னை: மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் படங்களை மட்டுமே நீதிமன்றங்களில் வைக்கவும் மற்ற தலைவர்களின் உருவப்படங்களை நீதிமன்ற வளாகங்களில் வைக்கக்கூடாது எனவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்களிடம் இருந்து சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் படங்களை நீதிமன்றங்களில் வைக்க பலமுறை அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது.

அரசியல் தலைவர்களின் உருவச் சிலைகள் அல்லது படங்கள் நிறுவப்பட்டால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சிலைகள் வைக்கக் கூடாது என உத்தரவிட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆலந்தூர் நீதிமன்ற நுழைவுவாயிலில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலையை அகற்ற உத்தரவிட்டது.
நீதிமன்ற வளாகங்களில் அரசியல் தலைவர்களின் படங்களை வைக்க வேண்டாம் என உயர் நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ள போதும், அண்மையில் மீண்டும் இந்த பிரச்சனை எழுந்தது. வானூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் இருக்கைக்கு பின்புறம் மேல் பகுதியில் இருந்த அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் படங்களை வைக்கவும் மற்ற தலைவர்களின் படங்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதில் தேசத்தந்தை மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் உருவப்படங்களை மட்டுமே வைக்கலாம் எனவும், மற்ற படங்கள் எதையும் வைக்கக்கூடாது என்றும், நீதிமன்ற உத்தரவை மீறுபவர்களின் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் புகார் அளிக்கவும் அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பார் கவுன்சிலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications