திடீரென பாதையை அடைத்த சென்னை ஐ.ஐ.டி... களமிறங்கிய தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.
சென்னை: சென்னை ஐ.ஐ.டியின் பின்புறத்தில் உள்ள பாதையை நிர்வாகத்தினர் அடைத்ததால் அது தொடர்பாக உரிய விளக்கம் கோரி தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் களத்தில் இறங்கியுள்ளார்.
வேளச்சேரி காந்திநகர் பகுதியில் உள்ள ஐஐடியின் பின்புற வழியாக அங்கு பணியாற்றும் ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் எளிதாக சென்று வந்துகொண்டிருந்தனர்.
மேலும், ஐஐடியில் உள்ள கேண்டீன்களில் அதிக விலைக்கு உணவுபண்டங்கள் விற்கப்பட்டதாகவும், இதனால் பின்புற வழியாக சென்று வெளியில் இருக்கும் கடைகளில் மாணவர்கள் ஸ்நாக்ஸ் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

ஐஐடி பின்புறம்
சென்னை ஐஐடிக்குள் செல்லும் வகையில் வேளச்சேரி காந்திநகர் பகுதியில் குறுகிய பாதை ஒன்று அந்த நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் இருந்து வருகிறது. அதன் வழியாக ஐஐடி ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினர் சென்று வந்தனர். மேலும், மாணவர்களும் இந்தப்பாதையை பயன்படுத்தி வந்தனர்.

ஐஐடிக்கு இடம்
சென்னையில் ஐஐடி தொடங்கும் போது அந்த நிறுவனத்திற்காக கிழக்கு வேளச்சேரி மக்களிடமிருந்து நிலம் பெறப்பட்டது. மேலும், அந்த பகுதியை ஐஐடியுடன் இணைக்கும் வகையில் கிருஷ்ணா கேட் என பெயரிடப்பட்டு ஒரு குறுகிய பாதையும் விடப்பட்டிருந்தது.

யார் அழுத்தம்?
இந்நிலையில் எந்த முன்னறிவிப்புமின்றி பின்புற பாதையை ஐஐடி நிர்வாகம் மூடியது அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. ஐஐடி வளாகத்தில் உள்ள கேண்டீன்களின் மாணவர்கள் உணவு பண்டங்கள் வாங்குவதை தவிர்த்து வெளியில் உள்ள கடைகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில் இந்த பாதை மூடப்பட்டதாக கூறப்படுகிறது.

விளக்கம் தேவை
இதனிடையே இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் வேளச்சேரி எம்.எல்.ஏ.வாகை சந்திரசேகர் ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்தனர். பாதை அடைக்கப்பட்டது பற்றி ஐஐடி நிர்வாகத்திடம் விளக்கம் கோரியுள்ளனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications