சென்னையில் வெளுத்தெடுத்த கனமழை.. நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளக்காடாக மாறிய மகிழ்ச்சி!
Recommended Video
சென்னை: சென்னையில் முதல் முறையாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நள்ளிரவு முதல் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. அதன் பிறகு வந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் அந்தளவுக்கு மழை பெய்யவில்லை.
இதனால் ஆண்டுதோறும் தண்ணீர் பஞ்சம், வறட்சி, விவசாயம் செழிப்பின்மை ஆகியவற்றால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அக்டோபர் மாதம்
இந்த நிலையில் இந்த ஆண்டாவது நல்ல மழை பெய்யும் என்றும் வரும் கோடையில் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருக்கவும் மக்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது.

வங்கக் கடல்
ஆரம்பத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்தது. அரபிக் கடலில் இரு புயல்கள் உருவாகின. எனினும் அவை தமிழகத்துக்கு பலனை அளிக்கவில்லை. அது போல் வங்கக் கடலில் உருவான புயலும் மேற்கு வங்கம் நோக்கி திரும்பிவிட்டது.

கொட்டித் தீர்த்த மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டிதீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் போல் நீர் தேங்கியிருந்தது.

வாகன ஓட்டிகள்
தாம்பரம்- பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலை முழுவதும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிகப்பட்டது. வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையே வெள்ளக்காடாக காட்சியளித்தது. இன்னும் ஒரு வாரத்துக்கு மழை என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications