சென்னையில் பனி மூட்டம் கிடையாது.. மொத்தமும் புகைதான்.. ஆரோக்கியமில்லை.. வெதர்மேன் ஷாக்கிங்!
சென்னையில் தற்போது பனி மூட்டம் இல்லை, புகை மூட்டம்தான் இருக்கிறது, காற்று ஆரோக்கியமற்ற நிலையை அடைந்துள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சென்னையில் தற்போது பனி மூட்டம் இல்லை, புகை மூட்டம்தான் இருக்கிறது, காற்று ஆரோக்கியமற்ற நிலையை அடைந்துள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
டெல்லி காற்று மாசுபாடு இந்தியாவையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதே சமயம் டெல்லி காற்று மாசுபாட்டால் சென்னையிலும் காற்று மாசுபாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான காரசார விவாதமும் நடந்து வருகிறது.
சென்னையில் காற்று மிக மோசமாக மாசு அடைந்து வருவதாகவும், காற்று தரக்குறியீடு சுவாசிக்க தகுதியற்ற அளவை எட்டியுள்ளதாக காற்று மாசுபாடு கண்காணிப்பு மையம் அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் எப்படி
தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்ட்டில் சென்னையில் காற்றின் அளவு கண்டிப்பாக ஆரோக்கியமற்ற நிலையை அடைந்து இருக்கிறது. ஆனால் டெல்லி அளவிற்கு சென்னை இன்னும் ஆபத்தான நிலையை அடையவில்லை. ஆனால் இந்த புகை எப்படி ஏற்படுகிறது என்பது குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை.

என்ன ஆதாரம்
நான் கொடுத்து இருக்கும் ஆதாரங்களை வைத்து மக்களே புகை ஏன் ஏற்படுகிறது, காற்று மாசு எப்படி இருக்கிறது என்று தீர்மானித்துக் கொள்ளலாம். சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும்.

என்ன ஆதாரம்
நான் கொடுத்து இருக்கும் ஆதாரங்களை வைத்து மக்களே புகை ஏன் ஏற்படுகிறது, காற்று மாசு எப்படி இருக்கிறது என்று தீர்மானித்துக் கொள்ளலாம். சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும்.

புகை எப்படி
சென்னையில் இன்று நாம் பார்ப்பது பனி மூட்டம் கிடையாது அது புகை. அதில் எந்த சந்தேகமும் கிடையாது. பனிமூட்டம் பிரச்சனை கிடையாது, ஆனால் புகைதான் பிரச்சனை.

டெல்லியில் இருந்து வருமா?
அதேபோல் டெல்லி மற்றும் வடஇந்தியாவில் இருந்து சென்னைக்கு புகை வராது என்று கூறுவதும் சின்ன பிள்ளைதனம். ஏனென்றால் காற்று வருவதற்கு பேருந்தோ, ரயிலோ தேவையில்லை. கிழக்கு தொடர்ச்சி மலைகள் கூட இந்தியாவில் பெரிய மலைகள் கிடையாது.

உலக மாடல்கள்
அதேபோல் உலக மாடல்களை வைத்து பார்த்தால் டெல்லியில் இருந்து சென்னைக்கு காற்று நகர்ந்து வருவதும் ஊர்ஜிதம் ஆகிறது, என்று கூறியுள்ளார். இதற்கான புகைப்படங்களை வெளியிட்டு வெதர்மேன் விளக்கி இருக்கிறார். ஆதாரத்திற்கான லிங்குகளை அவர் வெளியிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications