மெரினாவில் திறக்கப்படும் ஃப்ளூ ஃப்ளாக் கடற்கரை.. எப்படி மாறிவிட்டது பாருங்க.. அசர வைக்கும் வீடியோ
சென்னை: சென்னை மெரினாவில் அமைக்கப்படும் ப்ளூ ஃபிளாக் கடற்கரையின் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.
சென்னையில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மெரினா ப்ளூ கொடி கடற்கரையை அடுத்த சில வாரங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். சென்னை மாநகராட்சி கமிஷ்னர் குமரகுருபரன் இது தொடர்பாக செய்துள்ள போஸ்டில், நீலக் கொடி கடற்கரை வளாகம் காலையில் பரபரப்பாக இருக்கிறது. பணிகள் முழு வீச்சில் உள்ளன. சில மரக்கன்றுகள் நட்டுள்ளன. ஒரு விளையாட்டுப் பகுதி நிறைவடைந்துள்ளது.
கடைசி கட்டமாக மூன்று பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மூங்கில் சாய்வு நாற்காலிகள் மற்றும் குப்பைத் தொட்டிகள் தயாராக உள்ளன. கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் நிழல்கள் நிறுவப்பட்டுள்ளன. தியானத்திற்கான மூங்கில் சாய்வுத் தளம் திட்டமிடப்பட்டுள்ளது, என்று குறிப்பிட்டு உள்ளது.

அங்கே கட்டுமானங்கள் தொடர்பாக பரிசோதனைகளை ஜிசிசி முடித்துள்ளது. அடுத்த கட்டமாக ஜிசிசி தண்ணீர் பரிசோதனையை முடித்து, வரைபடங்களுடன் தகவல் பலகைகளை அமைத்து வருகிறது. 6 கோடியில் ஒப்பந்ததாரர் மூன்று ஆண்டுகளுக்கு கடற்கரையை பராமரிப்பார். 250 ஏக்கரில் மெரினாவில் மற்றொரு நீலக் கொடி நீட்டிப்பும் திட்டமிடப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் அருகே உள்ள 50 ஏக்கர் பகுதி விரைவில் நீலக் கொடி மண்டலமாக மாற உள்ளது. ₹6 கோடி நிதியுதவியுடன் சாய்ந்த இருக்கைகள், சிற்றுண்டிச்சாலை, வெளிப்புற ஜிம்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்பு, நவீன நடக்கும் பாதைகள் ஆகியவை இடம்பெறும்.
இங்கே வணிகர்கள் கடைபோட தடைசெய்யப்பட்டுள்ளனர். GCC ஆனது மெரினா முழுவதும் படிப்படியாக இதேபோல் மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளது. மே மாத இறுதிக்குள் உலகளாவிய சுற்றுச்சூழல் லேபிளான ப்ளூ பிளாக் சான்றிதழ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மெரினா கடற்கரையானது, புகழ்பெற்ற நீலக் கொடி சான்றிதழை பெற உள்ளது. இதை செயல்படுத்துவதற்கான டெண்டர்ள் கிரேட்டர் சென்னை மாநகராட்சியால் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தின் ஒரே நீலக்கொடி கடற்கரையாக செங்கல்பட்டில் உள்ள கோவளம் கடற்கரை உள்ளது. இந்தச் சான்றிதழானது, தூய்மை, பாதுகாப்பு மற்றும் கடற்கரையின் நிலைமை உள்ளிட்ட சர்வதேச தரங்களைச் பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். ₹1,675 கோடியில் கடலோர மேம்பாட்டு திட்டம் தொடங்கி உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக சென்னை மெரினா பீச்சை அடியோடு மாற்ற முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மற்ற மூன்று கடற்கரைகள் நீலக் கொடி சான்றளிக்கப்பட்ட கடற்கரைகளாக அறிவிக்கப்படுவதற்கு ஒரு படி நெருங்கிவிட்டன, தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையம் (NCSCM) விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) இதற்காக தயாரித்து உள்ளது.
தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு இயக்கத்தின் சார்பில் உலக வங்கி கடனுதவியுடன் ₹1,675 கோடியில் கடலோர மேம்பாட்டு புதிய திட்டங்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் தமிழ்நாடு முழுக்க உள்ள கடலோர பகுதிகள் மேம்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு கடலோர பகுதிகளை சீரமைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கத்தின் கீழ் அமைக்கப்படும் சில முக்கிய திட்டங்கள் இங்கே உள்ளன. இதன் ஒரு கட்டமாக சென்னை மெரினா பீச்சை அடியோடு மாற்ற முடிவு செய்துள்ளனர்.
கோவளம் கடற்கரை நீலக் கொடி சான்றளிப்புத் திட்டத்திற்கான தமிழகத்தின் முன்னோடி கடற்கரையாகும், மேலும் இது தமிழக அரசின் ஆதரவுடன் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டது. இது நீல கடற்கரையாக சான்றளிக்கப்பட்டது.
Blue Flag Beach campus is buzzing in the morning. Works are in full swing. Have planted few saplings. One set of play area is complete. Three are in progress. Bamboo recliners and garbage bins are ready. Watch towers and shades installed. Bamboo ramp for meditation is planned. pic.twitter.com/I55J6vbwDI
— Kumaragurubaran (KGB) (@kgbias) June 8, 2025
தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கத்தின் கீழ் அமைக்கப்படும் சில முக்கிய திட்டங்கள் இங்கே உள்ளன.
1.நாகப்பட்டினம் மற்றும் சென்னையில் கடல் ஆமை பாதுகாப்பு மையங்கள்
2. மனோரா, தஞ்சாவூரில் உள்ள சர்வதேச டுகோங் பாதுகாப்பு மையம்
3. பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் மற்றும் சென்னையில் உள்ள சதுப்பு நிலத்தை மீட்டமைத்தல்
4. சதுப்புநிலங்கள், கடல் புல் மற்றும் நீல கார்பன் தீர்வுகள்
5. மன்னார் வளைகுடா கரியாச்சல்லி தீவுகளில் அரிப்பு கட்டுப்பாடு மற்றும் பவழ மறுசீரமைப்பு
6. ப்ளூ பிளாக் கடற்கரைகள்
7. கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைத்தல்.
8. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் ஸ்மார்ட் கடற்கரை கிராமங்கள்
9. எண்ணூர் சிற்றோடை மீட்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டங்கள் இந்த வருடமே நிறைவேற்றப்படும்.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications