சென்னையில் 20 செ.மீ அளவுக்கு மழை பெய்தாலும்.. இனி மழைநீர் தேங்காது! மேயர் கொடுத்த முக்கிய அப்டேட்
சென்னை: ஒவ்வொரு பருவமழையின்போதும் சென்னையில் மழைநீர் தேங்கும் பிரச்சனை பெரும் தலைவலியாக மாறிவிடுகிறது. இந்நிலையில், இனி சென்னையில் 20 செ.மீ அளவுக்கு மழை பெய்தாலும், மழைநீர் தேங்காது என மாநகராட்சி மேயர் பிரியா கூறியிருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம், சுற்றுலா என பல்வேறு நோக்கங்களுக்காக சென்னைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிப்பு நகரத்தின் மக்கள் தொகை வளர்ச்சியை வீக்கமாக மாற்றியிருக்கிறது. எனவே கழிவுநீர், மழைநீர் மேலாண்மை சவாலானதாக மாறியுள்ளது.

இருப்பினும் புதிய திட்டங்கள் மூலம் சென்னை மாநகராட்சி, மழைநீர் வடிகால் பணிகளை சீரமைத்து வருகிறது. அந்த வகையில், எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக சில பணிகளை மாநகராட்சி வேகப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக தண்டையார்பேட்டை போன்ற வடசென்னை பகுதிகளில் வடிகால் பணிகளை தீவிரமாக மாநகராட்சி முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர் மண்டலங்களுக்கு உட்பட்ட 45,71 வார்ட்டில் கணேசபுரம் சுரங்கப்பாதையின் மேல் புதிய மேம்பாலம் ரூ.226.55 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதனை மேயர் பிரியா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதேபோல தண்டையார்பேட்டை பகுதியல் நடைபெற்று வரும் பாலம் கட்டுமான பணிகள், குளம் தூர் வாரும் பணிகள், மழைநீர் வடிகால் விரிவாக்க பணிகளையும் பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தி.நகர் சிஐடி காலனி உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு அவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல கணேசபுரம் பாலமும் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி முடிக்கப்படும். வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் மண்டலம் 4 மற்றும் 46 ஆகிய வார்டுகளில் ரயில்வே இடத்தில் உள்ள 9 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் மழை நீர் தேங்கும் பிரச்சினை இருக்காது. மட்டுமல்லாது குளத்தை ஒட்டி மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயாராக இருக்கிறது. மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு தண்ணீரை வெளியேற்றும் வகையில் மின் மோட்டார்கள் ரெடியாக வைக்கப்பட்டுள்ளன. அதேபோல சாலை சீரமைப்பு பணிகள் மழை காலத்துக்கு பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
மழைநீர் வடிகால்கள் பெரிய கால்வாய்களில் தூர்வாரும் பணி இயந்திரம் மற்றும் மனித வளத்தை பயன்படுத்தி நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சியில் 15 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்தால் அதை தாங்கும் வகையில் உள் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி 24 மணி நேரத்தில் தண்ணீர் வடியும்" என்று கூறியிருக்கிறார்.
-
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு












Click it and Unblock the Notifications